தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – முன் கூட்டியே கோடை விடுமுறை!
தமிழகத்தில் நடப்பு ஆண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோடை வெப்பம்:
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலைக்கு பின்பு அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வினை நடத்த மாநில பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டது. கடந்த கல்வியாண்டில் கொரோனா தாக்கம் காரணமாக 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளதால் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
தமிழக கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மாலையில் ஆண்கள், காலை பெண்களுக்கு வகுப்புகள்!
அதனால் நடப்பு ஆண்டில் பொதுத்தேர்வுகளை நடத்த அரசு திட்டமிட்டு தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. அதில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியது. அதில் 12ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் தேர்வு தொடங்கவுள்ளது. இந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதில் சிரமப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே கொரோனாவால் ஒன்றை ஆண்டுகளுக்கு மேல் விடுமுறை விடப்பட்டிருந்ததால் மாணவர்கள் கல்வி நிலை கேள்விக்குறியாக உள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த நேரத்தில் தேர்வுகள் வரவுள்ளதால் விரைந்து பாடங்களை நடத்தி மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தும் நோக்கில் சனிக்கிழமைகளும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. தற்போது வெயில் சுட்டெரிப்பதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் முன்கூட்டியே கோடை விடுமுறை, பள்ளிகள் செயல்படும் நேரங்களில் மாற்றம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.