தமிழக கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மாலையில் ஆண்கள், காலை பெண்களுக்கு வகுப்புகள்!
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் நடத்தப்படும் தினசரி வகுப்புகளில் காலையில் மாணவிகளுக்கும், மாலை மாணவர்களுக்கு வகுப்புகளையும் நடத்துவது குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை நடத்த இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
கல்லூரிகளுக்கு அறிவிப்பு:
கடந்த 2 ஆண்டுகளுக்கு பின் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் முறையில் நடத்தப்படாமல் நேரடியாக நடைபெற இருக்கிறது. பெரும்பான்மையாக கல்லூரிகளில் மாணவர்களுக்கு சுழற்சி முறை வகுப்புகள் நடத்தப்படுகிறது. அதில் சில மாற்றங்கள் அமல்படுத்த இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
தமிழகத்தில் இன்னும் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
அதில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு, அதில் காலையில் பெண்களுக்கு வகுப்புகளையும், மாலையில் ஆண்களுக்கு வகுப்புகளையும் நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பெண்களுக்கான கல்வியை ஊக்குவிக்கும் வரவேற்கத்தக்க திட்டமாக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலையில் மாணவிகளுக்கு மட்டும் வகுப்புகளை நடத்த பரிசீலனை என உயர் கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
இத்திட்டத்தின் மூலம் மாணவிகள் அதிகம் பட்டப்படிப்பை தொடர வழி வகுக்கப்படும். பெற்றோர்களும் மாணவிகளை கல்லூரிகளுக்கு அனுப்ப அதிகம் முன்வருவார்கள். இன்னும் கிராமப்புற பெற்றோர்கள் பெண்பிள்ளைகளை கல்லூரிகளுக்கு அனுப்ப தயக்கம் காட்டும் சூழல் இருக்கும் நிலையில், இதுபோன்ற ஒரு அறிவிப்பு அவர்களுக்கு தயக்கமின்றி தங்களது பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்ப உந்து சக்தியாக அமையும். பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும் என்று பல இடங்களில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில் அரசின் இந்த அறிவிப்பு பாராட்டத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.