தமிழகத்தில் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை? முதல்வர் எடுக்கப்போகும் முடிவு!

0
தமிழகத்தில் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை? முதல்வர் எடுக்கப்போகும் முடிவு!
தமிழகத்தில் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை? முதல்வர் எடுக்கப்போகும் முடிவு!
தமிழகத்தில் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை? முதல்வர் எடுக்கப்போகும் முடிவு!

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் இன்று தொடங்கியுள்ளது. அதனால் தற்போது மாணவர்களுக்கு விரைவில் கோடை விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

கோடை விடுமுறை

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்துடன் தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் இன்று முதல் 28ம் தேதி வரை நிலவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பள்ளி மாணவர்கள் தற்போது பள்ளிகளுக்கு செல்வதில் சிரமப்பட்டு வருகின்றனர். அத்துடன் இதற்கு முன்பாக மாணவர்களின் நலன் கருதி கோடை காலம் முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும். இதற்கு முன்னேற்பாடாக ஏப்ரல் மாதத்திற்குள் பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளிக்கப்படும். இந்த ஆண்டு கொரோனா காரணமாக கல்வியாண்டு தாமதாகத் தான் தொடங்கப்பட்டது.

ஆதார் கார்டு பெற திட்டமிடுவோருக்கு முக்கிய அறிவிப்பு – முழு விபரங்கள் இதோ!

நடப்பு ஆண்டில் குறைவான நாட்களே நேரடி வகுப்பு நடைபெற்றுள்ளதால், தற்போது தான் பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. அதன்படி இந்த ஆண்டு மே மாத இறுதி வரை பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. அதனால் தற்போது பொதுத் தேர்வுக்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. மேலும் தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் விரைவில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியதாவது, தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அளிப்பது குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை மேற்கொண்டு முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். அத்துடன் பொதுத்தேர்வுகள் இன்னும் முடிவடையாத நிலையில் முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்பட்டால் தேர்வினை ஆன்லைன் முறையில் நடத்துவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றும் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆலோசனை முடிவில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!