பள்ளி மாணவர்களுக்கு மே 23 முதல் ஜூன் 24 வரை கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வகையில் பீகார் மாநில பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கும் மே 23 முதல் ஜூன் 24 வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
கோடை விடுமுறை:
முந்தைய ஆண்டுகளை விட, இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கோடை வெயிலின் தாக்குதலால், முன்கூட்டியே மாணவர்களுக்கு கோடை விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பீகாரில் பள்ளிகளில் கோடை விடுமுறை குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவின் பேரில், அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள் மே 23 முதல் ஜூன் 24 வரை மூடப்படும். மே 22ம் தேதி (இன்று) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், மே 21ம் தேதி (நேற்று) வரை குழந்தைகள் பள்ளிக்கு சென்றனர். இதற்கு முன், மாநிலத்தில் நிலவும் கடும் வெப்பத்தை கருத்தில் கொண்டு பள்ளி நேரங்களை மாவட்ட நிர்வாகம் குறைத்துள்ளது.
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – அமைச்சர் சக்கரபாணி தகவல்!
இதனால் மாநிலத்தின் கடும் வெயிலில் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை மாறியுள்ளது. இருப்பினும் பீகாரில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை அளிக்கப்படவில்லை. கொரோனா காரணமாக, பாடத்திட்டம் முடிக்கப்படாததால், பள்ளி நீண்ட காலமாக மூடப்பட்டுள்ளது என்று தனியார் பள்ளி நிர்வாகிகள் கூறுகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாடத்திட்டத்தை முடித்த பின்னரே மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிப்பது நல்லது. மாநிலம் முழுவதும் தற்போது வெப்பம் அதிகமாக உள்ளது. இதை மறுக்க முடியாது, ஆனால் சரியான நேரத்தில் படிப்பை முடிக்கவில்லை என்றால், மாணவர்கள் மேலும் பின் தங்குவார்கள் என்று தனியார் பள்ளிகள் தன்னுடைய தரப்பிலிருந்து தெரிவித்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், அரசு சார்பில் கோடை விடுமுறை தேதி அறிவிக்கப்பட்டாலும் பாடத்திட்டத்தை முடித்த பின்னரே விடுமுறை வழங்கப்படும். பீகாரில் நிலவும் வெப்பத்தை கருத்தில் கொண்டு பள்ளிகளின் நேரம் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறது. பீகாரில் பல மாவட்டங்களில் காலை 10.45 மணி வரை மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.