தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – அமைச்சர் சக்கரபாணி தகவல்!
தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி வரும் காலங்களில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவைகள் பாக்கெட்டுகளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சக்கரபாணி தகவல்:
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்கும் கூட்டுறவு துறை மூலம் சாமானிய மக்களுக்கு மலிவு விலையில் அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா வருகைக்கு பின், தமிழக அரசு இலவசமாக ரேஷன் பொருட்களை வழங்கியது. ஆனால் அரிசி பருப்பு ஆயில் பாக்கெட்களை ரேஷன் கடை ஊழியர்கள் வெளி சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக எழுந்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக அரசு ரேஷன் விதிமுறைகளில் பல மாற்றங்களை தொடர்ந்து செய்து வருகிறது.
இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் உணவு மற்றும் உணவு வழங்கல் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆன்லைன் மூலம் முன்பதிவு தொடக்கம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஆன்லைன் மூலமாக விவசாயிகளின் 95% பேர் பதிவு செய்துள்ளனர். மேலும் நேரடி பொருள் நிலையத்தில் உள்ள கணக்கர்கள், எழுத்தர்கள், அலுவலர்களுக்கு மூட்டை ஒன்றுக்கு என்ற கணக்கில் கையூட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. இந்த புகாரின் பேரில் இதுவரை 150 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளதாக தெரிவித்தார். இந்த மாதிரியான தவறுகளை தடுக்க அனைத்து நேரடி கொள்முதல் நிலையத்திலும் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பேசிய அவர் விரைவில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி, சர்க்கரை, பருப்பு ஆகியவற்றை பாக்கெட்டுகளில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றார்.