மே 6ம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு அமல் – மாநில அரசின் திடீர் உத்தரவு!
ராஜஸ்தான் ஜோத்பூரில் வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட ஊரடங்கு மே 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜோத்பூர் காவல்துறை ஊரடங்கு உத்தரவையும் பிறப்பித்ததுடன், வதந்திகள் பரவுவதைத் தடுக்க மொபைல் இன்டர்நெட் சேவைகளை நிறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு நீட்டிப்பு, 140 பேர் கைது:
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரம்ஜான் கொண்டாட்டத்திற்கான வேலைகளில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜெயந்தி விழாவுக்காக இந்து அமைப்பினர் கொடிநடும்போது, இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கி கொண்டனர். இதை தொடர்ந்து போலீசாரை நோக்கியும் கற்கள் வீசப்பட்டது. எல்லை மீறி சென்ற மோதலை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். மேலும் கண்ணீர் புகை குண்டுகள் வீசி அவர்களை விரட்டியடித்தனர். இருப்பினும் அங்கு பதற்றம் நிலவியதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். தொடர்ந்து நடந்த கல்வீச்சு தாக்குதலில் 5 போலீசார் காயமடைந்தனர்.
TN Job “FB Group” Join Now
மேலும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியது, அதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜோத்பூர் பகுதி முழுவதும் தடுப்புகள் அமைத்து காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் ஜோத்பூரின் உதய் மந்திர், நகோரி கேட், கந்தா பல்சா, பிரதாப் நகர், தேவ் நகர், சூர் சகர் மற்றும் சர்தர்புரா ஆகிய போலீஸ் நிலைய கட்டுப்பாட்டு இடங்களில் நேற்று நள்ளிரவு வரை ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த ஊரடங்கு உத்தரவை நாளை வரை (மே 6) நீட்டித்து மாவட்ட காவல் ஆணையர் உத்தரவிட்டு உள்ளார். இருப்பினும் தேர்வுக்கு செல்ல உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊரடங்குச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு இன்று முதல் தொடக்கம் – 8 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!
மேலும் மருத்துவ சேவையில் ஈடுபடும் பணியாளர்கள், வங்கி அதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு ஊரடங்குச் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து செய்தித்தாள் வியாபாரிகள் செய்தித்தாள்களை விநியோகிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை ஆய்வு செய்து மொபைல் இன்டர்நெட் சேவை மீண்டும் தொடங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும். தற்போது மாவட்டத்தில் அமைதியான சூழல் நிலவுகிறது, ஈத் பண்டிகைக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மாவட்டத்தில் வெடித்த வன்முறை தொடர்பாக 140 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கூடுதல் டி.ஜி.பி. ஹவா சிங் கூறியுள்ளார்.