தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு இன்று முதல் தொடக்கம் – 8 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!

0
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு இன்று முதல் தொடக்கம் - 8 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு இன்று முதல் தொடக்கம் - 8 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு இன்று முதல் தொடக்கம் – 8 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று (மே.5) முதல் துவங்க இருக்கும் நிலையில் இத்தேர்வுகளை 8 லட்சம் மாணவர்கள் எழுதவிருக்கின்றனர். மேலும், தேர்வுக்கு வருபவர்கள் முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வுகள் துவக்கம்

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பேரலைத்தொற்று நிமித்தம் பள்ளி மாணவர்களுக்கான வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதுடன், தேர்வுகளும் நடத்தப்படவில்லை. ஆனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வண்ணம் ஆன்லைன் மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டது. இதற்கிடையில் தமிழகத்தில் கொரோனா 3ம் அலைப்பரவலுக்கு பின்பாக பிப்ரவரி மாதம் முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த 2 ஆண்டுகளாக தடைபட்ட பொதுத்தேர்வுகளை இந்த ஆண்டு நடத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில், இன்று (மே.5) முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் துவங்க இருக்கிறது. இத்தேர்வுகள் இம்மாதம் 28 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளை 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 மாணவர்களும், 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 மாணவிகளும் என மொத்தம் 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 பேர் எழுதவிருக்கின்றனர். மேலும், தமிழகம் முழுவதும் சுமார் 3,119 தேர்வு மையங்கள் பொதுத்தேர்வுக்காக தயார் செய்யப்பட்டுள்ளது. இப்போது தேர்வு மையங்களில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றும் வகையில் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் சில முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.

மீண்டும் வெளியே சென்று போலீசில் சிக்கிய கண்ணன், காப்பாற்ற வரும் ஜீவா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

அதன்படி, தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தேர்வு மையங்களில் ஒவ்வொரு மாணவருக்கும் இடையே ஆறடி இடைவெளி இருக்க வேண்டும். வகுப்பறைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்வு எழுதும் மாணவர்கள் செல்போன் எடுத்துவர தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை மீறுபவர்களுக்கு தேர்வு எழுத நிரந்தரமாக தடைவிதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று தேர்வுகளை எழுத இருக்கும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!