இந்தியாவில் LPG கேஸ் சிலிண்டருக்கான மானியம் ரத்து? பொதுமக்கள் அதிர்ச்சி!
இந்தியாவில் பொது மக்களின் நலனுக்காக வழங்கப்பட்டு வந்த சமையல் எரிவாயுவிற்கான மானியம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால் இது தொடர்பாக அரசு தரப்பில் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில் மக்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.
மானியத் தொகை:
இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்து பொது மக்களின் நலன் கருதி அனைவரும் பயன்படுத்தி வரும் கேஸ் சிலிண்டருக்கு மானியத் தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த தொகை நுகர்வோர் வழங்கியுள்ள அவர்களது வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டு விடும். இது குறித்து சந்தேகம் இருந்தால் மக்கள் தங்களது சிலிண்டர் வழங்கும் மையத்திற்கு நேரடியாக சென்று தெரிந்து கொள்ளலாம். அதே போல தங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியத் தொகை குறித்த விவரத்தினை ஆன்லைன் வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் வாரிசுக்கு அரசு வேலை – சுகாதாரத்துறை அறிவிப்பு!
இந்நிலையில், கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு கடுமையான நிதி நெருக்கடியினை சந்தித்து வந்தது. இதனால் சிலிண்டருக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தொகை நிறுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. ஆனால், அரசு இது குறித்து எந்தவித அறிவிப்பினையும் தெரிவிக்கவில்லை. ஆனால், கடந்த 2020-2021 நிதியாண்டில் சிலிண்டர் மானியத்திற்காக ரூ.16,461 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கி இருந்தது. 2021-2022 நிதியாண்டில் வெறும் ரூ.1,233 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே, பலருக்கும் மானியத் தொகை வழங்கப்படவில்லை என்ற தகவல் மெய்யாகியுள்ளது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி சரிவு – நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்!
மேலும் மானியம் வழங்கப்படும் சிலிண்டரின் விலை மற்றும் மானியம் வழங்கப்படாத சிலிண்டரின் விலையும் ஒன்றாக தான் இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஜூன் மாதம் வரை சிலிண்டரின் விலை 200 ரூபாய்க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் மானியாமில்லா சிலிண்டர் விலை 858 ஆக உள்ளது. இதனிடையே அரசின் மானியத்தொகை குறித்த விவரம் மக்களுக்கு சரி வர தெரிவிக்கப்படாததால் அனைவரும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.