தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் வாரிசுக்கு அரசு வேலை – சுகாதாரத்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 53 பேரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அரசு வேலை அறிவிப்பு:
நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது. முதல் மற்றும் இரண்டாம் அலை என கொரோனா உருமாறி பரவி வரும் நிலையில் மூன்றாம் அலை விரைவில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. கொரோனா 2ம் அலையின் தொடக்கத்தில் பாதிப்பு தீவிரமாக இருந்து வந்த நிலையில் நாளுக்கு நாள் நோய்த்தொற்று பரவும் விகிதம் மற்றும் இறப்பு விகிதம் அதிகரித்து வந்தது. இதனால் பலர் தங்கள் பெற்றோர்களை இழந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி சரிவு – நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்!
அவ்வாறு கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தடுப்பு பணிகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பங்கு இன்றியமையாதது. களப்பணியில் பாடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 311 பேர் பலி – 23,529 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
அதனை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 53 பேரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. எனவே பணி வழங்க வேண்டியவர்களின் விவரங்களை சேகரித்து அனுப்ப மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.