நாடு முழுவதும் ஒரே நாளில் 311 பேர் பலி – 23,529 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

0
நாடு முழுவதும் ஒரே நாளில் 311 பேர் பலி - 23,529 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
நாடு முழுவதும் ஒரே நாளில் 311 பேர் பலி - 23,529 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
நாடு முழுவதும் ஒரே நாளில் 311 பேர் பலி – 23,529 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தொடர்ந்து பரவி வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் உறுதியான கொரோனா பாதிப்பு, உயிரிழப்புகள் நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொரோனா நிலவரம்:

நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்த நிலையில் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனவே ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டது. தற்போது மூன்றாம் அலை பரவும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தகுதியுடையோர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

அக்.1 முதல் வங்கிகளில் வரப்போகும் மாற்றங்கள் – அமலுக்கு வரும் ஆட்டோ டெபிட்! முழு விபரம் இதோ!

நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,529 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,37,39,980 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 311 பேர் உயிரிழந்து உள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 4,48,062 ஆக அதிகரித்து உள்ளது.

தமிழகத்தில் அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, கொரோனா தாக்கத்தில் இருந்து ஒரே நாளில் 28,718 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதனால் தற்போது வரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் எண்ணிக்கை 3,30,14,898 ஆக உயர்ந்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,77,020 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது வரை 88,34,70,578 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!