சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி சரிவு – நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தங்கம் விலை:
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் வேலையிழந்து தவித்தனர். இந்த நிலையில் அனைத்து தொழில்களும் நஷ்டத்தை சந்தித்து சிரமத்திற்கு உள்ளானது. இந்த கால கட்டத்தில் ஏராளமானோர் தங்கத்தில் முதலீடு செய்வதை விரும்பினர். இதன் விளைவாக தங்க விலை எதிர்பாராத அளவு உயர்ந்தது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ஒரு சவரன் தங்கத்தின் விலை 35 ஆயிரத்துக்கும் மேல் விற்கப்படுகிறது. ஓரளவுக்கு கொரோனா பரவல் குறைந்த பிறகு நாடு இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியதும் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 311 பேர் பலி – 23,529 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
இருப்பினும் தங்கத்தின் விலையானது மக்கள் எதிர்பார்த்த அளவு இன்னும் குறையவில்லை. இந்த விலை ஏற்றத்தால் சாமானிய மக்கள் நகை வாங்குவது இயலாத ஒன்றாக இருந்து வருகிறது. எப்போது தங்கம் விலை குறையும், நகை வாங்கலாம் என்று நகை பிரியர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். சுபமுகூர்த்த மற்றும் பண்டிகை நாட்களில் ஆபரணத் தங்கத்தின் சற்று விலை உயர்ந்தே காணப்படுகிறது.
அக்.1 முதல் வங்கிகளில் வரப்போகும் மாற்றங்கள் – அமலுக்கு வரும் ஆட்டோ டெபிட்! முழு விபரம் இதோ!
இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ஒரு சவரன் ரூ.34,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.4,340 விற்பனையாகிறது. தொடர்ந்து 35 ஆயிரமாக இருந்த வந்த ஒரு சவரன் தங்கத்தின் விலை தற்போது குறைந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலை சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் ரூ.63 க்கு விற்பனையாகிறது.