10, 11 & 12 ஆம் வகுப்பு துணைத்தேர்விற்கு தயாராகி வரும் மாணவர்கள் கவனத்திற்கு – இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்!
புதுச்சேரியில் 2 ஆண்டுகளுக்கு பின் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், ஜூலை மாதம் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வுகள் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணைத்தேர்வுகள் விண்ணப்பம்:
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பொதுத்தேர்வுகள் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு திட்டமிட்டபடி புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. மேலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. நடந்து முடிந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத அல்லது தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு ஜூலை மாதம் துணைத்தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் கடந்த மே மாதம் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி தோல்வியடைந்த மாணவர்கள், வருகை புரியாத மாணவர்களும் தற்போது நடக்க இருக்கும் தேர்வுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளுக்கு சென்று வருகிற ஜூன் 27 ஆம் தேதி முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
ஜூலை மாதம் நடைபெற இருக்கும் துணைத்தேர்வுகள் எழுத தகுதியுள்ள தனித்தேர்வகள் மற்றும் மே மாதம் நடந்த 10, 11 ஆம் வகுப்பில் தோல்வியடைந்த பாடங்களுக்கும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்களும் 27 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 4 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க வசதியாக 12 ஆம் வகுப்பிற்கு சேவை மையமாக மாணவர்களுக்கு முத்திரையர்பாளையம் இளங்கோஅடிகள் அரசு மேல்நிலைப்பள்ளியும், மாணவிகளுக்கு லாஸ்பேட்டை செல்ல பெருமாள்பேட்டை விவேகானந்த மேல்நிலைப்பள்ளியிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 1 முதல் ஊழியர்களின் மாத சம்பளம் 50 சதவீதமாக குறையும் – வெளியான திடுக்கிடும் தகவல்!
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியும், மாணவிகளுக்கு கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் சேவை மையமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு நேரடி தனித்தேர்வராக 11 ஆம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெறாத மாணவர்கள் அனைவரும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுவதற்கும், 11 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம். இதற்கான கட்டணமாக 10 ஆம் வகுப்பிற்கு ரூ, 125, மற்றும் ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ. 50 என மொத்தம் ரூ. 175 வசூலிக்கப்படும். 12 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ. 50 கட்டணம் வசூலிக்கப்படும். அதனுடன் ரூ. 35 மற்றும் ஆன்லைன் பதிவு கட்டணமாக ரூ. 50 வசூலிக்கப்படும். 12 ஆம் வகுப்பு தேர்வு முதலில் எழுத இருக்கும் தனித்தேர்வர்களுக்கு ரூ. 150 தேர்வு கட்டணமாகவும், இதர கட்டணம் ரூ. 35 ஆன்லைன் கட்டணம் ரூ. 50 வசூலிக்கப்படும்.