ஜூலை 1 முதல் ஊழியர்களின் மாத சம்பளம் 50 சதவீதமாக குறையும் – வெளியான திடுக்கிடும் தகவல்!
ஜூலை 1 ஆம் தேதி முதல் பல புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வர இருப்பதால் ஊழியர்களின் மாத சம்பளம் குறையும் மற்றும் முதலீடு பாதிக்கும், பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதிய மாற்றங்கள்:
அரசின் அனைத்து நலத்திட்டங்களும் முறையாக பெறுவதற்கு பான் எண்ணுடன், ஆதாரை கட்டாயமாக இணைக்க வேண்டும். வரும் ஜூன் 30ம் தேதிக்குள் பான் கார்டுடன் இணைக்கவில்லை எனில் ரூபாய் ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 1 ஆம் தேதி முதல் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனையை செய்வதற்கு ஒரு சதவீதம் வரைக்கும் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து வரும் ஜூலை 10 ஆம் தேதி முதல் புதிய தொழிலாளர் சட்டம் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்களின் மாத சம்பளம் குறைய வாய்ப்புள்ளதாகவும் ஊழியர்களின் மொத்த சம்பளத்திலிருந்து 50 சதவீதம் மட்டுமே சம்பளம் வழங்க உள்ளதாகவும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த புதிய தொழிலாளர் சட்டத்தில் 12 மணி நேரம் வரைக்கும் ஊழியர்கள் வேலை பார்க்க வேண்டும் எனவும், வாரத்தில் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் எனவும், 5 மணி நேரத்திற்கு ஒருமுறை ஊழியர்களுக்கு இடைவெளி கண்டிப்பாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் ஏசி விலையும் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் அவ்வப்போது சமையல் எரிவாயு விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த வகையில் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் சமையல் எண்ணெய் விலையும் உயர வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டீமேட் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது கேஒய்சி ஆவணங்களை வரும் ஜூன் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கேஒய்சி ஆவணங்களை சமர்ப்பிக்க இயலாதவர்களுக்கு வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் டீமேட் கணக்கு செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.