தமிழக மாணவர்களின் கல்விக்கடன் ரத்து? நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்!
தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக கட்சியினர் கொடுத்திருந்த வாக்குறுதிகளின் படி கல்விக்கடனை ரத்து செய்வது குறித்து முதல்வர் ஆலோசித்து வருவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
கல்விக்கடன் ரத்து
தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது பெருமளவு வாக்குகள் வித்தியாசத்தில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சியை கைப்பற்றியது. இதற்கு முன்னதாக சட்டப்பேரவை தேர்தலின் போது மற்ற கட்சியினரை போல திமுக வும், மக்களை கவரும் வண்ணம் சில வாக்குறுதிகளை அளித்திருந்தது. இதை தொடர்ந்து தேர்தலில் வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த முதல்வர் முக ஸ்டாலின் அரசு, தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது.
Personal Loan வாங்க திட்டமா? குறைந்த வட்டி விகிதத்தில் பெறும் வழிமுறைகள் இதோ!
அதன் கீழ் தமிழகம் முழுவதும் தற்போது நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம், ஆவின் பால் விலை குறைப்பு ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பெட்ரோல் விலையிலும் மூன்று ரூபாய் வரை குறைப்பை அறிவித்திருந்தது. இதற்கிடையில் கொரோனா 2ம் அலை காரணமாக தமிழகத்தில் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார். ன்றாலும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தி வரும் அரசு, 5 சவரன் நகைக்கான கடன்களை தள்ளுபடி செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நவ.15 முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு முழுநேர பள்ளிகள் – கல்வித்துறை அறிவிப்பு!
இப்போது திமுக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டிருந்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான கல்விக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை எதிர்பார்த்து மாணவர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்வது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும்’ என குறிப்பிட்டுள்ளார்.