நவ.15 முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு முழுநேர பள்ளிகள் – கல்வித்துறை அறிவிப்பு!

0
நவ.15 முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு முழுநேர பள்ளிகள் - கல்வித்துறை அறிவிப்பு!
நவ.15 முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு முழுநேர பள்ளிகள் - கல்வித்துறை அறிவிப்பு!
நவ.15 முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு முழுநேர பள்ளிகள் – கல்வித்துறை அறிவிப்பு!

புதுச்சேரியில் வரும் நவம்பர் 15ம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு நேர வகுப்புகள் நடத்தப்பட வாய்ப்புள்ளது என அம்மாநில கல்வித்துறை வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளது.

முழு நேர வகுப்புகள்:

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து கடந்த செப்.1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தையே பின்பற்றி வரும் புதுச்சேரி அரசும் கடந்த செப்-1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகளுக்கு அனுமதி அளித்துள்ளது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் வரும் நவ1ம் தேதி 1 முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய முடிவானது பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நவ.4ம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் பள்ளிகள் நவ-8ம் தேதி திறக்கலாம் என்று பல்வேறு தரப்பினரும் ஆலோசனை அளித்து வருகின்றனர்.

ரேஷன் கடைகளுக்கு வார விடுமுறை – மாநில அரசு உத்தரவு!

அதனை தொடர்ந்து புதுச்சேரி அரசும் தமிழக அரசை பின்பற்றி நவ-1ம் தேதி பள்ளிகள் திறக்க முடிவு செய்திருந்தது. ஆனால் நவ-1ம் தேதி விடுதலை நாள், 2ம் தேதி கல்லறை நாள் மற்றும் 4ம் தேதி தீபாவளி பண்டிகை என்பதால் அன்று பள்ளிகள் திறக்கவில்லை. பின்னர் நவம்பர் 2ம் வாரத்தில் அதாவது நவ-8ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால் பாடங்கள் முறையாக நடத்தி முழுமையாக தேர்வுக்கு தயார் செய்ய முடியாத சூழல் உருவாகிறது.

WhatsApp டெலிட் ஆன மெசேஜ்களை படிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

அதனால் மாணவர்களுக்கு முழுநேர வகுப்பு தொடரவும், தினசரி வகுப்புகள் நடத்தவும் அனுமதி வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து புதுச்சேரி அரசு தமிழக ஆசிரியர்களின் இந்த கோரிக்கை குறித்து நடவடிக்கை மேற்கொள்ள பரிசீலித்து வருகிறது. மேலும் பள்ளிகளில் இடவசதிக்கு ஏற்ப நவ.15ம் தேதி முழுநேர வகுப்பு தொடங்க அனுமதி வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது குறித்து முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர் முடிவு செய்து பின்னர் அறிவிப்பு வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!