ரேஷன் கடைகளுக்கு வார விடுமுறை – மாநில அரசு உத்தரவு!
உணவு பொருட்கள் விநியோகம் செய்யும் ரேஷன் கடைகளுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதனால் ரேஷன் கடை ஊழியர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்,
ரேஷன் கடைகள்:
மக்களின் அன்றாட வாழ்வில் அத்தியாவசிய தேவையாக இருப்பது உணவு. எனவே வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் அரிசி, பருப்பு, சர்க்கரை முதலியன ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பு மக்களுக்கு இது உதவும் வகையில் அமைந்துள்ளது. டெல்லி மாநிலத்தில் 2000க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது. இதில் 17.77 லட்சம் குடும்ப அட்டைகள் மூலம் 72.78 லட்சம் பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர்.
TN TRB முதுநிலை ஆசிரியர் வயது வரம்பு நீட்டிப்பு எதிரொலி – 2 லட்சம் பேருக்கு வாய்ப்பு!
இந்நிலையில் வாரத்தின் ஏழு நாட்களிலும் பயனாளிகளுக்கு உணவு தானியங்களை விநியோகிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதை எதிர்த்து ரேஷன் விநியோக உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்ற டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை அடுத்து வார விடுமுறைக்கு அனுமதி வழங்கியது. அதனை தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த டெல்லி அரசு முடிவு செய்து வாரத்தில் ஒரு நாள் விடுமுறையை அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
WhatsApp டெலிட் ஆன மெசேஜ்களை படிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
இது குறித்து டெல்லி அரசு அதிகாரிகள் கூறியதாவது, கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி உயர் நீதிமன்றம் வாரத்தின் ஏழு நாட்களிலும் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு தேவைப்படும் உணவு தானியங்களை விநியோகிப்பதை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, வாரத்தின் ஏழு நாட்களும் அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படுவதை கட்டாயமாக்கினோம். ஆனால், இப்போது உயர்நீதிமன்றம் மாற்றம் செய்துள்ளதால், ரேஷன் விநியோகஸ்தர்களுக்கு வாராந்திர விடுமுறைக்கு அனுமதித்துள்ளோம் என கூறியுள்ளனர்.