TN TRB முதுநிலை ஆசிரியர் வயது வரம்பு நீட்டிப்பு எதிரொலி – 2 லட்சம் பேருக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கான டிஆர்பி தேர்வில் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த வயது வரம்பு 5 ஆண்டுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதால் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வயது வரம்பு அதிகரிப்பு:
தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு 9 – 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும், காலிப்பணியிடங்களை நிரப்பவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை ஏற்று தற்போது அரசு மேல்நிலை பள்ளிகளில் உள்ள காலியாக 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடத்திற்கு தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
WhatsApp டெலிட் ஆன மெசேஜ்களை படிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
இந்த நிலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு முதன் முதலாக வயது வரம்பு கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. 40 வயதைக் கடந்த பட்டதாரி ஆசிரியர்களின் பங்கு பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்த்தப்பட்டு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளார். அதில் பொதுப்பிரிவினருக்கு 40 வயதில் இருந்து 45 ஆகவும் மற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45 லிருந்து 50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்கள் கவனத்திற்கு – புதிய தேர்வு மதிப்பெண் முறை அறிமுகம்!
தற்போது ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளதால், சுமார் 2 லட்சம் பி.எட் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் இந்த மாதம் 31 கடைசி தேதியாகும். தற்போது வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதால், விண்ணப்ப கால அவகாசம் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.