பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்கள் கவனத்திற்கு – புதிய தேர்வு மதிப்பெண் முறை அறிமுகம்!

0
பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்கள் கவனத்திற்கு - புதிய தேர்வு மதிப்பெண் முறை அறிமுகம்!
பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்கள் கவனத்திற்கு - புதிய தேர்வு மதிப்பெண் முறை அறிமுகம்!
பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்கள் கவனத்திற்கு – புதிய தேர்வு மதிப்பெண் முறை அறிமுகம்!

தமிழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு புதிய தேர்வு மதிப்பெண் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய தேர்வு மதிப்பெண் முறை:

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. கடந்த இரண்டு வருடங்களாக மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளிலே கல்வி கற்கும் நிலை தொடர்ந்தது. பின்னர் ஆன்லைன் வகுப்புகளை தொடர்ந்து ஆன்லைன் தேர்வும் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்து வருகின்றது. அதனால் கடந்த செப்.1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது அக்.25ம் தேதி பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்ளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து அகத்தேர்வு மற்றும் பருவத்தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடும் முறையில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தின் ‘இந்த’ 22 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!

முன்பெல்லாம் அகத்தேர்வு மற்றும் பருவத்தேர்வுகளுக்கு 25:75 என்ற அடிப்படையில் மதிப்பீடு செய்து மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. மூன்று அகத்தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் ஏதேனும் இரண்டை எடுத்துக்கொண்டு மதிப்பெண் மதிப்பீடு செய்யப்படும். ஆனால் ஒரு சில தன்னாட்சி கல்லூரிகள் இரண்டு அகத்தேர்வுகள் நடத்தி அதன் சராசரி மதிப்பெண் கணக்கிடப்படும். ஆனால் தற்போது பாரதியார் பல்கலையின் கீழ் இம்முறை மாற்றப்பட்டுள்ளது. அதாவது அகத்தேர்வு மற்றும் பருவத்தேர்வு இரண்டிற்கும் 50:50 என்ற அடிப்படையில் மதிப்பெண்கள் மதிப்பீடு செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முறை 2021-22ம் கல்வியாண்டில் முதலாமாண்டு மாணவர்களுக்கு நடைமுறைப்படுத்த கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டிச.1 முதல் கேபிள் டிவி கட்டணம் உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி!

இம்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்த கல்லுாரிகளும் மாணவர்கள் வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி வாய்ப்பில் சமநிலை வாய்ப்பு பாதிக்கப்படும் என்ற காரணத்தினால் முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்தகைய மதிப்பீடு முறை பாரதியார் பல்கலையின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் நடைமுறைப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!