தமிழகத்தில் டிச.1 முதல் கேபிள் டிவி கட்டணம் உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் கேபிள் டிவி கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தெரிவித்துள்ளார். இது வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேபிள் டிவி கட்டணம்:
பொழுதுபோக்கு சாதனமாக இயங்கி வரும் தொலைக்காட்சியில் மக்கள் பிடித்த நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்து வருகின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் விரும்பிய சேனல்களுக்கு மாறும் முறை என்பது அறிமுகமானது. இந்த முறையை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான சேனல்களை தேர்வு செய்து வந்தனர். அவ்வாறு அவர்கள் தேர்வு செய்யும் சேனல்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தும் வசதி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளைய மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அவ்வாறு தேர்வு செய்யப்படும் சேனல் நிறுவனங்கள் தங்கள் சேனல்களுக்கான கட்டணத்தை அதிகபட்சமாக ரூ.19 என நிர்ணயித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல சேனல்களுக்கும் அதிகபட்ச கட்டணமான 19 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனவே இதில் திருத்தி அமைக்கப்பட்ட கட்டணம் ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. மேலும் ஒரு சேனலுக்கு அதிகபட்ச கட்டணம் 19 ரூபாயிலிருந்து 12 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் அதிகமான மற்றும் விரும்பிய சேனல்களை தேர்ந்தெடுத்தனர்.
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நெட் பேங்கிங்! எளிய வழிமுறைகள்!
ஒரு குறிப்பிட்ட சேனல் நிறுவனத்தின் தொகுப்பு சேனல்களின் கட்டணம் 40 லிருந்து 69 ஆக உயர்கிறது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நிறுவனங்களும் தொகுப்பு சேனல்களின் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே மாத கேபிள் கட்டணம் டிசம்பர் 1ம் தேதி 30 முதல் 40 சதவீதம் வரை உயரும் என கேபிள் ஆபரேட்டர்கள் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அரசு கேபிள் கட்டணம் 130 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி உடன் சேர்த்து 154 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.