அம்மா உணவகங்களில் இனி சப்பாத்தி கிடையாது? தொழிலாளர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தில் உணவு பொருட்கள் பற்றாக்குறை நிலவுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் கோதுமை மாவு பற்றாக்குறையால் இரவு நேரங்களில் சப்பாத்திக்கு பதில் சாம்பார் சாதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அம்மா உணவகம்:
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் ஏழை எளியோர்க்கு மிக குறைந்த விலையில் உணவு விற்பனை செய்யும் நோக்கில் அம்மா உணவகம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தில் ஏழை மக்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் மூன்று வேளையும் மலிவு விலையில் உணவை பெருகின்றனர். அம்மா உணவகத்தில் காலை, 1 ரூபாய்க்கு இட்லி, மதியம் 5 ரூபாய்க்கு சாம்பார், தயிர் உள்ளிட்ட கலவை சாதங்கள், இரவில் ஒரு சப்பாத்தி மூன்று ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இத்திட்டம் திமுக ஆட்சிக்கு வந்தால் இருக்குமா? என்ற கேள்வி எழுந்தது.
தமிழக மாணவர்களின் கல்விக்கடன் ரத்து? நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்!
அப்போது புதிய முதல்வராக பொறுப்பேற்ற முக ஸ்டாலின் மக்கள் பயன் பெறும் இந்த திட்டம் இந்த ஆட்சியிலும் தொடரும் என்று அறிவித்தார். கொரோனா ஊரடங்கின் போதும் அம்மா உணவகம் சிறப்பாக செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது சென்னையில் உள்ள அம்மா உணவகத்தில் இரவில் வழங்கப்படும் சாப்பாடு தொடர்பாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து மண்டல வாரியாக உணவு பொருட்கள் இருப்பு நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சி உத்தரவிட்டது.
Personal Loan வாங்க திட்டமா? குறைந்த வட்டி விகிதத்தில் பெறும் வழிமுறைகள் இதோ!
பெரும்பாலான அம்மா உணவகங்களுக்கு முறையான உணவு பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அம்மா உணவகத்தில் கோதுமை மாவு இல்லாததால் இரவில் சப்பாத்திக்கு பதிலாக சாம்பார் சாதம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து மண்டல அதிகாரிகளிடம் தகவல் கேட்கப்பட்டு வருகிறது. அம்மா உணவகம் தமிழக அரசின் கொள்கை முடிவு. அதில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் தொடர்ந்து மலிவு விலையில் உணவு வழங்கப்படும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.