தமிழக அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – போராட்டம் நடத்த முடிவு!
தமிழக அரசு ஊழியர்கள் சார்பில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என்று பல வருடங்களாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. இதனை அரசு சார்பில் அமல்படுத்துவதற்கான வாக்குறுதியும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பழைய ஓய்வூதிய திட்டம்:
தமிழக அரசின் ஊழியர்கள் அனைவருக்கும் கடந்த 2004ம் ஆண்டு முதல் புதிய ஓய்வூதிய திட்டம் தான் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஊழியர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறைவாகவே உள்ளது. இதனால் முதலில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்று கடந்த பல வருடங்களாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சி காலத்தில் இதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இதனால் தேர்தல் வாக்குறுதியாக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் என்று திமுக சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.
TCS, Wipro உள்ளிட்ட ஐடி நிறுவன ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – தொடரும் Work From Home மாடல்!
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து 1 வருடம் நிறைவடைந்த போதிலும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படவில்லை. இதனால் அரசு ஊழியர்கள் தொடர்ந்து இந்த கோரிக்கையினை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று நீடாமங்கலத்தில் மாநிலத் தலைவா் எஸ். தமிழ்ச்செல்வி தலைமையில் மாநிலச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத்தில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Exams Daily Mobile App Download
அதில் திமுக அரசின் தோ்தல் கால வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்பு ஊதியத்தை பணப்பலனாக வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மே 26 ஆம் தேதி மாவட்ட தலைமையிடங்களில் தா்ணா போராட்டம் மற்றும் அடுத்த மாதம் 16 ஆம் தேதி சென்னையில் மாநில, மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்கும் உண்ணாவிரதம் மற்றும் ஜூன் 6 முதல் 15 வரை மாநிலம் முழுவதும் ஊழியா் சந்திப்பு இயக்கம் நடத்துவது என்பது போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.