TCS, Wipro உள்ளிட்ட ஐடி நிறுவன ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – தொடரும் Work From Home மாடல்!
ஐடி நிறுவன ஊழியர்கள் கொரோனா காலகட்டத்தில் இருந்தே Work From Home முறையை தான் பின்பற்றி வருகின்றனர். தற்போது TCS, Wipro உள்ளிட்ட ஐடி நிறுவனங்களில் புதிய மாடலை அறிமுகம் செய்வதால் Work From Home முறையை பின்பற்றவே திட்டமிட்டுள்ளது.
Work From Home:
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக அனைத்து ஊழியர்களும் வீட்டில் இருந்தபடியே தான் பணியாற்றி வந்தனர். தற்போது ஓரளவுக்கு கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் பழையபடி ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரைக்கும் மூத்த ஊழியர்கள் மட்டுமே நேரடியாக அலுவலகங்களுக்கு சென்று வேலை பார்த்து வருகின்றனர். இந்த ஆண்டின் பாதியில் அடுத்தகட்ட ஊழியர்களை அழைக்க ஐடி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது. தற்போதைக்கு 5% ஊழியர்கள் மட்டுமே அலுவலகங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்தியா, பெலாரஸ் உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல பயண தடை – அரசு அதிரடி அறிவிப்பு!
சில ஐடி நிறுவனங்களில் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டும் அலுவலகங்களுக்கு சென்று வேலை பார்க்கும் படி திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் குறைய குறைய அலுவலகங்களுக்கு வரும் நாட்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளிலேயே ஐடி நிறுவனங்கள் அனைத்தும் நல்ல வளர்ச்சியடைந்துவிட்டது. இந்நிலையில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ் மற்றும் HCL போன்ற நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் திட்டத்தையே ஊக்குவிக்கின்றன.
Exams Daily Mobile App Download
அதாவது TCS, இன்ஃபோசிஸ் மற்றும் HCL போன்ற நிறுவனங்கள் ஹைப்ரிட் மாடலை தொடர முடிவு செய்துள்ளனர். இந்த ஐடி நிறுவனங்கள் 25X25 மாடலை வெளியிட இருப்பதாகவும், ஊழியர்களுக்காக இயக்க மண்டலங்கள் (OOZ) மற்றும் ஹாட் டெஸ்க்குகளை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த ஹைப்ரிட் வேலை மாதிரிக்கு அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய 25 சதவீத ஊழியர்களுக்கு மேல் தேவைப்படாது எனவும், அலுவலகத்தில் 25 சதவீதத்திற்கு மேல் நேரத்தை செலவிட வேண்டியதில்லை எனவும் அறிவித்துள்ளது.