பிப்ரவரி 25 வரை 2 முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

0
பிப்ரவரி 25 வரை 2 முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு அமல் - மாநில அரசு அறிவிப்பு!
பிப்ரவரி 25 வரை 2 முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு அமல் - மாநில அரசு அறிவிப்பு!
பிப்ரவரி 25 வரை 2 முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

குஜராத் மாநிலத்தின் 2 முக்கிய நகரங்களான அகமதாபாத் மற்றும் வதோதரா பகுதியில் பிப்ரவரி 25ம் தேதி வரை இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பதாக முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார். இந்த கட்டுப்பாடுகள் இன்று (பிப்.18) முதல் அமலுக்கு வருகிறது.

இரவு ஊரடங்கு

கடந்த மாதத்தில் தீவிரமடைந்து வந்த கொரோனா 3ம் அலை பாதிப்புகளுக்கு மத்தியில் குஜராத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளின் நிமித்தம் கடந்த சில வாரங்களாக மாநிலம் முழுவதும் கொரோனா நேர்மறை விகிதம் சரிவடைய துவங்கியது. இதனை கருத்தில் கொண்டு குஜராத்தின் அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், பாவ்நகர், ஜாம்நகர், ஜுனாகத் மற்றும் காந்திநகர் ஆகிய எட்டு முக்கிய நகரங்களில் பிப்ரவரி 10 முதல் இரவு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.

பிப்ரவரி 21 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு – மாநில கல்வித்துறை முடிவு!

இதனுடன் திருமணம், ஹோட்டல்கள் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை அரசு நீக்கியுள்ளது. அந்த வகையில் திறந்தவெளியில் நடத்தப்படும் திருமணங்களில் 150 பேர் கலந்துகொள்ள முடியும். இதே போல், மாநிலத்தில் சமூக, கல்வி, கலாச்சார, மத அல்லது அரசியல் நிகழ்ச்சிகளில் 150 பேர் வரை கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் இறுதிச் சடங்குகளில் 100 பேர் வரை கலந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த செயல்பாடுகள் அனைத்தும் தற்போது அமலில் இருந்து வருகிறது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி தரமான பொருட்கள்!

இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத் மற்றும் வதோதரா ஆகிய இரண்டு முக்கிய நகரங்களில் மட்டும் இன்று (பிப்.18)) முதல் பிப்ரவரி 25 வரை, தினசரி நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரவு ஊரடங்கு உத்தரவு தொடர்பான முடிவு முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் நடைபெற்ற கொரோனா வைரஸ் மறுஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் குஜராத்தில் நேற்று (பிப்.17) ஒரு நாளில் 884 கொரோனா புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!