பிப்ரவரி 21 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு – மாநில கல்வித்துறை முடிவு!
கோவா மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தோற்று பாதிப்புகள் குறைந்து வருவதால், பிப்ரவரி 21 முதல் அனைத்து கல்வி நிறுவனங்களையும் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலும் மீண்டும் திறக்க இருப்பதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 3ம் அலை பாதிப்புகள் கடந்த டிசம்பர் மாதம் முதல் பரவி அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. இதனுடன் கொரோனா வைரஸின் உருமாறிய வகையான ஓமைக்ரான் வகை தொற்றின் பாதிப்பும் அதிக அளவில் உறுதி செய்யப்பட்டு வந்தது. இதனால் மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ள அறிவுறுத்தியது. இதனால் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளித்தது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் சிறப்பு விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இதேபோல் கோவாவில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை அளித்து மாநில அரசு முன்னதாக உத்தரவிட்டிருந்தது. தற்போது மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது. கோவாவில் கடந்த 24 மணி நேரத்தில் 103 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,44,508 ஆக உள்ளது. இதனால் பிப்ரவரி 21 முதல் அனைத்து கல்வி நிறுவனங்களையும் முதல் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மீண்டும் திறக்க கல்வித்துறை அதிகாரியால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி தரமான பொருட்கள்!
இது தொடர்பாக கோவா அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கோவிட்-19 வழக்குகள் குறைந்துள்ளதால், திங்கள்கிழமை முதல் 1 முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவித்தது. இந்த உத்தரவு அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும், அனைத்து பள்ளிகளிலும் முறையாக கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.