தமிழக அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் சிறப்பு விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு அலுவலர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பிற்கு 14 நாட்கள் தான் என்ற வரையறை கிடையாது எனவும், பாதிப்பிலிருந்து முழுமையான குணமடையும் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என அரசு கடிதம் அனுப்பி இருக்கிறது.
அரசு அறிவிப்பு:
கடந்த 2 ஆண்டுகளாக உலகநாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவில் இருந்து முழுமையாக மீள முடியாமல் பல வளர்ந்த நாடுகள் கூட திணறி வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருந்தாலும் உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாநில அரசுகள் கொரோனாவில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது,.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி தரமான பொருட்கள்!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு அலுவலர்களுக்கு நோய்த்தொற்று முழுமையாக குணமடையும் வரை 14 நாட்கள் மட்டுமே ஊதியத்துடன் கூடிய சிறப்பு விடுமுறை வழங்கப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில் இந்த விடுமுறை குறித்த புதிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அதன் படி ருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசு ஊழியர் கொரோனா நோய்த் பாதிக்கப்பட்டிருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி, அவர் சிகிச்சைப் பெற்ற நாட்கள் தொற்றால் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் முழுமைக்கும் மருத்துவச் சான்றிதழின் அடிப்படையில் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
TNPSC குரூப் 2 & 2A தேர்வுக்கு தயாராகுவோர் கவனத்திற்கு – தேர்வு தேதி இன்று அறிவிப்பு!
மேலும் கொரோனா நோய்த் தொற்று அதிகம் பாதிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியில் (Containment Zone) இருந்தால் அதற்குரிய அறிவிப்பு (Notice) சமர்ப்பித்து தடை செய்யப்பட்ட நாட்களை சிறப்பு தற்செயல் விடுப்பாக வழங்கலாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் இனி 14 நாட்கள் தான் என்ற வரையறை கிடையாது. பாதிப்பிலிருந்து முழுமையான குணமடையும் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என அரசின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.