TNPSC மூலம் இனி இந்த பதவிகளுக்கும் ஆட்கள் தேர்வு – உயர்கல்வித்துறை முக்கிய முடிவு!
தமிழக அரசின் கீழ் பல்வேறு பல்கலைகழகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனம் முறை படி நடக்கவில்லை என்று குற்றசாட்டு எழுந்துள்ளது.
முக்கிய தகவல்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பல்வேறு போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு அரசு அலுவலகங்களில் உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு மாநில உயர்கல்வித்துறை என்பது உயர்கல்வியை மாநிலம் முழுவதும் பரவலாக்கப்படுவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. உயர்கல்வித் துறையானது சமூகத்தின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு கொள்கைகள், சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை அடிப்படை நோக்கமாக கொண்டுள்ளது.
பிப்ரவரி 25 வரை 2 முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
இந்நிலையில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனம் குறித்த புதிய தகவலை மாநில உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த வகையில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழத்தில் உதவி பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனத்தை அந்தந்த பல்கலைக்கழகமே மேற்கொண்டு வருகிறது. இந்த பணி நியமனம் சரியான கல்வி முறை மற்றும் சரியான இட ஒதுக்கீடு வகையில் பின்பற்றாமல் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.
பிப்ரவரி 21 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு – மாநில கல்வித்துறை முடிவு!
இந்த புகார் அடிப்படையில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழத்தில்ஆசிரியர் அல்லாத பணியாளர்களை நியமிக்கும் பொறுப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைக்க பரிசீலனை நடக்கிறது. மேலும் இது குறித்து உயர் கல்வித்துறை துணை செயலர் இளங்கோ ஹென்றிதாஸ் பல்கலைகளுக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அனைத்து பல்கலைக்கழகமும் தங்களின் ஆசிரியர் அல்லாத பணியாளர் விவரங்களை உயர்கல்வி துறைக்கு விரைவில் அனுப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.