SSC 3,261 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – அக்.20 முதல் வகுப்புகள்!
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பல்வேறு காலி பணியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு இணையதளத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பயிற்சி வகுப்புகள்:
இந்தியாவில் மத்திய மாநில அரசு பணிகளுக்கு தேர்வாணையம் மூலம் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக மாணவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்கின்றனர். அனைத்து மாநிலங்களிலும் போட்டி தேர்வுகளுக்காக கோச்சிங் சென்டர்கள் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதை தனியார் மையங்கள் நடத்துகின்றனர். இந்த பயிற்சி மையங்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தமிழகத்தில் அசைவ பிரியர்கள் & மது அருந்துவோருக்கு அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்த பயிற்சி மையங்களும் மூடப்பட்டது. இந்த நிலையில் தனியார் பயிற்சி மையங்களில் ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வந்தது. தனியாரை தொடர்ந்து அரசும் பயிற்சி மையங்களை நடத்தி வருகிறது. தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் அசைவ பிரியர்கள் & மது அருந்துவோருக்கு அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் காலி பணியிடங்களுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பித்தவர்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி காட்டல் மையத்திலோ இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதில் பங்கு கொள்ள விருப்பமுள்ளவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.