கள்ளக்குறிச்சி பள்ளியில் காவல்துறை சிறப்புக்குழுக்கள் தீவிர விசாரணை – அறிவிப்பு வெளியீடு!
12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கு தொடர்பாக கள்ளக்குறிச்சி பள்ளியில் காவல்துறையை சேர்ந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் ஈடுபட்டு வருகின்றது.
கள்ளக்குறிச்சி பள்ளி:
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டதை தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று தற்போது தான் ஓரளவுக்கு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி பள்ளியில் தீவிர விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. அதில் முதற்கட்டமாக ட்ரோன் கேமராக்களை பறக்க விட்டு பள்ளியின் காட்சிகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாணவியின் தற்கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இது ஒரு புறம் இருக்க மறுபுறம் நீதிமன்றத்திலும் இந்த வழக்கு நடைபெற்று கொண்டிருக்கிறது. அதாவது, இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என மாணவியின் தந்தை சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் பின்னர், நேற்று மாணவியின் உடலை 4 பேர் கொண்ட மருத்துவ குழுவினர்கள் மறு பிரேத பரிசோதனை செய்தனர். மேலும், மாணவியின் மரணம் பற்றி விசாரணை நடத்த காவல்துறை சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல் – அமைச்சர் வெளியீடு!
இந்நிலையில், சேலம் டிஐஜி பிரவீன்குமார் அபிநவு தலைமையிலான சிறப்பு குழுக்கள் தற்போது பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தற்போது மாணவி தங்கி படித்து வந்த பள்ளியில் முறையாக விடுதி நடத்த எந்த அனுமதியும் வாங்கவில்லை என்பதும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, பள்ளி தொடர்பான அடுக்கடுக்கான பல உண்மைகள் வெளியே வந்து கொண்டிருக்கிறது. மேலும், அதே பள்ளியில் மாணவர்களை படிக்க வைப்பதற்கான வேலைப்பாடுகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது.