தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல் – அமைச்சர் வெளியீடு!
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி சம்பவத்தின் எதிரொலியாக இந்த அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை:
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் பள்ளிகள் அனைத்தும் செயல்படத் தொடங்கி மாணவர்கள் அனைவரும் ஆர்வமுடன் பள்ளிக்கு செல்கின்றனர். தமிழக அரசு பள்ளி மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக பல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள், இலவச பாட புத்தக திட்டம், இலவச பஸ் பாஸ் திட்டம் போன்ற பயனுள்ள திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
Exams Daily Mobile App Download
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் ஜி.கே.உலக பள்ளியில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களுக்கான மண்டல ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மேலும் இந்த கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு உரையாற்றினார். கூட்டத்தில் பேசிய அமைச்சர், ராணிப்பேட்டை மாவட்டம் கல்வியில் பின்தங்கிய நிலையில் உள்ளது. அதனை எவ்வாறு முன்னோக்கி எடுத்து செல்வது மாணவ மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை எவ்வாறு உயர்த்துவது என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார்.
விவசாயிகளுக்கான Kisan பென்சன் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவது எப்படி? மத்திய அரசு விளக்கம்!
மேலும் 9,10,11,12 வகுப்பு மாணவ,மாணவிகளுக்கு பள்ளிகள் திறப்பதற்கு முன்பு 5 நாட்கள் கவுன்சிலிங் நடத்த உள்ள திட்டம் விரைவில் முதல்வர் ஒப்புதலுடன் செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். இதனால் மாணவர்கள் தவறான முடிவுகள் எடுப்பது குறையும் என்றும் தெரிவித்தார். இதை தவிர மாணவர்கள் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள், தன்னம்பிக்கை வளர்க்கும் நிகழ்ச்சிகளை நடத்தி வெற்றி பெறுபவர்களை வெளிநாடு அழைத்து செல்லும் திட்டம் குறித்து பல முன்னெடுப்புகளை நடத்தி வருவதாக கூறினார். பெற்றோர்கள் மற்ற மாணவர்களோடு தங்கள் குழந்தைகளை ஒப்பிட வேண்டாம் என்றும், தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளியின் வெற்றியை நிலை நிறுத்த மாணவர்களிடையே மன அழுத்தத்தை ஏற்படுத்தும் விதமாக செயல்படக் கூடாது என்றும் கள்ளக்குறிச்சி சம்பவத்தினை அடுத்து அரசு உத்தரவை மீறி பள்ளிகளை திறக்காத 981 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பியுள்ளதாக கூறினார்.