விவசாயிகளுக்கான Kisan பென்சன் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவது எப்படி? மத்திய அரசு விளக்கம்!
விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டமான பிரதமரின் கிசான் பென்ஷன் திட்டத்தை குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் விரிவான பலன்களை பற்றி இப்பதிவில் காண்போம்.
கிசான் பென்ஷன் திட்டம்:
மத்திய அரசானது விவசாயிகளின் நலனுக்காக பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. குறிப்பாக பிரதான் மந்திரி சம்மன் நிதி அதாவது கிசான் பென்ஷன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு 3 தவணையாக 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6000 ரூபாய் விவசாயிகளின் நலனுக்காக வழங்கி வருகிறது. இதுவரை 9 தவணைகள் மூலம் விவசாயிகளுக்கு பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் மொத்தம் 18,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 10 வது தவணை வழங்குவதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
பிரதமர் கிசான் மந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் 60 வயதுக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு மாதமும் பென்ஷன் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு முதலீடு திட்டமாகவும். இந்த திட்டத்தின் கீழ் 18-40 வயதுடைய விவசாயிகள் ஒவ்வொரு மாதமும் 3000 வரையிலான பென்ஷன் தொகை 60 வயதிற்கு பின் பெற முடியும். ஆனால் இந்த பென்ஷன் தொகையை பெற பிரதமர் கிசான் மந்தன் யோஜனா திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும்.
கள்ளக்குறிச்சி பள்ளியை பார்வையிட்ட குழந்தைகள் நல ஆணையர் – செய்தியாளர் பேட்டி!
இத்திட்டத்துக்காக எல்ஐசி நிறுவனத்துடன் மத்திய வேளாண்மை கூட்டுறவு மற்றும் விவசாய நலத்துறை கூட்டணி அமைத்துள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் மாதம் 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை செலுத்தி வர வேண்டும். 60 வயதை தொட்ட பின் மாதந்தோறும் சிறு,குறு,விவசாயிகளுக்கு மாதந்தோறும் 3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும். எனினும் இந்த திட்டத்தில் தேசிய பென்ஷன் திட்டம், தொழிலாளர் ஈட்டுறுதி கழகம், தொழிலாளர் நிதி அமைப்பு திட்டம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் பயன்பெறும் விவசாயிகளுக்கு கிசான் பென்சன் கிடையாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.