கள்ளக்குறிச்சி பள்ளியை பார்வையிட்ட குழந்தைகள் நல ஆணையர் – செய்தியாளர் பேட்டி!
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தமிழகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அந்த பள்ளியை ஆய்வு செய்த குழந்தைகள் நல ஆணையர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி விவகாரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி, பள்ளியின் விடுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுதியின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதனை தொடர்ந்து மாணவியின் தற்கொலைக்கு ஆசிரியர்கள் தான் காரணம் எனவும், ஆசிரியர்கள் பிள்ளைகளிடம் கடுமையாக நடந்துகொண்டதால் தான் மாணவி தற்கொலை செய்துகொண்டார் எனவும் பெற்றோர்கள் புகார் வைத்திருந்தனர். இந்நிலையில், மாணவியின் தற்கொலைக்கு நீதி கிடைத்தே தீர வேண்டும் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Exams Daily Mobile App Download
அதாவது, பள்ளியின் உடைமை பொருட்கள் மொத்தத்தையும் சேதப்படுத்தி இதற்கு பிறகு அந்த பள்ளியை பயன்படுத்தவே முடியாது என்கிற அளவிற்கு போராட்டக்காரர்கள் பள்ளியை நிலைகுலைய வைத்துவிட்டனர். இந்நிலையில், அந்த பள்ளியில் பயின்று வந்த மாணவர்களை வேறு பள்ளியில் சேர்க்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதே பள்ளியில் தான் எம்குழந்தைகள் கல்விகற்க வேண்டும் என மற்ற பெற்றோர்கள் கோரிக்கை வைத்திருந்ததால் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை கூடிய விரைவில் அதே பள்ளியிலேயே படிக்க வைப்பதற்கான வேலைப்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பொது மக்களுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம்? முதல்வர் உத்தரவு!
மேலும், மற்றொரு பக்கம் மாணவியின் மரணம் தொடர்பான விசாரணையும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் மாணவி தற்கொலை செய்துகொண்ட பள்ளியில் முறையாக விடுதி நடத்த அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. சட்டத்திற்கு புறம்பாக தான் இத்தனை நாட்களாக இந்த பள்ளி விடுதியை நடத்தி வந்திருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், 18 வயதிற்கு குறைவான மாணவர்களின் பெயர், புகைப்படம் என எதையும் சேனல்கள், செய்தித்தாள்கள் ஆகியவை அடையாளப்படுத்த கூடாது எனவும் குழந்தைகள் நல ஆணையர் அறிவித்துள்ளார்.