மே 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல் – கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு! கொரோனா பரவல் எதிரொலி!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போது கொரோனா பரவல் பாதிப்புகள் அதிகரித்து வரும் காரணத்தால், கவுதம்புத்த நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது இடங்களில் 4 பேருக்கு கூடக்கூடாது என்பது உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா கட்டுப்பாடுகள்
கடந்த சில வாரமாக நாடு முழுவதும் கொரோனா தொற்றின் புதிய பாதிப்புகள் மீண்டும் வேகமெடுக்க துவங்கி இருக்கிறது. குறிப்பாக, தேசிய தலைநகர் டெல்லி, உத்தரப்பிரதேசம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை கொரோனா 4ம் அலைக்கான ஆரம்பம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அந்த வகையில் இப்போது ஒவ்வொரு நாளும் 3000க்கும் மேற்பட்டவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதியாகி வருவதையடுத்து, பொதுமக்கள் முகக்கவசங்களை அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – கார்டுகள் ரத்து! இதற்காக தான்?
இந்த நடவடிக்கையானது, கொரோனா கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்ட ஒரு மாதத்திற்குள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனுடன் அந்தந்த மாநிலத்தில் நிலவும் பாதிப்புகளுக்கு ஏற்றபடி கட்டுப்பாடுகளை அமல்படுத்திக்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது உத்தரப்பிரதேச மாநிலம் கவுதம்புத்த நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மாநிலத்தில் தற்போதுள்ள கொரோனா சூழலை கருத்தில் கொண்டு வரும் மே மாதம் 31ம் தேதி வரை இக்கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
இதற்கிடையில், ரம்ஜான், அக்ஷய திரிதியை போன்ற பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் பூஜை, நமாஸ் செய்யக்கூடாது என்றும் நான்கு பேருக்கு மேல் கூடக்கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் கவுதம்புத் நகருடன் இணைந்துள்ள நொய்டா, தாத்ரி, ஜீவர் பகுதிகளுக்கு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் முகக்கவசங்களை அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும், பள்ளிகள் அருகே ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவது தடை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.