அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – கார்டுகள் ரத்து! இதற்காக தான்?
மத்திய அரசின் பொது விநியோகத்துறையின் கீழ் இலவசமாக ரேஷன் பெறும் பயனர்கள் கார்டு விதிகளின் படி, பொருட்களை முறையாக பெறாவிட்டால் அவர்களின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்டுகள் ரத்து
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தகுதியுள்ள நபர்களுக்கும் மத்திய அரசின் பொது விநியோகத்துறையின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு ஒருவர் ரேஷன் கார்டு பயனராக இருக்க வேண்டும். மேலும், அரசு வழங்கும் சில சலுகைகளை பெற்றுக்கொள்ளவும் இந்த கார்டுகள் பயன்படுகிறது. இந்தியாவில், ஒவ்வொரு தனிநபரின் வருமானத்தை பொறுத்து இந்த கார்டுகள் வேறுபடும் என்பது கவனிக்கத்தக்கது. இந்த சூழலில் கார்டு விதிகளின் படி தகுதியில்லாத நபர்கள் ரேஷன் பொருட்களை பெற்றால், அந்த கார்டை ஒப்படைக்கவோ அல்லது ரத்து செய்யவோ அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
TNPSC Group 4 VAO தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – அதிகாரபூர்வ பாடத்திட்டம் வெளியீடு!
அந்த வகையில் அட்டையை ஒப்படைக்காதவர்கள், அரசின் சரிபார்ப்பில் சிக்கினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதுவரை அவர்கள் பெற்றுக்கொண்ட ரேஷனையும் திரும்பப் பெறவும் அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, கொரோனா தொற்றுநோய்களின் போது ஏழைகளுக்கு இலவச ரேஷன் மூலம் அத்தியாவசிய பொருட்களை வழங்கும் சேவையை அரசாங்கம் தொடங்கியது. ஆனால் கடந்த சில நாட்களில் அரசு தரும் இலவச ரேஷனை பல லட்சம் தகுதியில்லாதவர்களும் பயன்படுத்தி வருவது கவனத்துக்கு வந்துள்ளது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் முறையான வகையில் ரேஷன் பொருட்களை பெறாதவர்களின் கார்டை ரத்து செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனை கவனத்தில் கொண்டு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என அரசாங்கம் அறிவுறுத்தி இருக்கிறது. இப்போது, கார்டு வைத்திருப்பவர் தனது சொந்த வருமானத்தில் சம்பாதித்த 100 சதுர மீட்டர் பரப்பளவில் ப்ளாட் அல்லது வீடு, நான்கு சக்கர வாகனம், டிராக்டர், ஆயுத உரிமம், குடும்ப வருமானம் (கிராமத்தில்) இரண்டு லட்சத்துக்கும், நகரத்தில் ஆண்டுக்கு மூன்று லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால் அவர்கள் ரேஷன் கார்டை தாலுகா மற்றும் டிஎஸ்ஓ அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.