தமிழ் மொழி மேம்படுத்த சிறப்பு திட்டம் – தமிழக அரசு அறிவிப்பு!
தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்த திறனறி தேர்வு திட்டம் அறிமுகம் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மேலும் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ் மொழி:
உலகில் உள்ள மொழிகளில் மிகவும் தொன்மையான மொழி தமிழ் மொழியாகும். தமிழ் மொழிக்கென்று உலகெங்கும் தனி மரியாதை உள்ளது என்றால் மிகையாகாது. தமிழ் மொழி தமிழர்களுக்கு தாய்மொழியாக விளங்குகிறது. இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் தமிழ் மொழிக்கு தமிழ் சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழ்ச் சங்க மாநாடு நடத்தப்படுகிறது. மேலும் தமிழ் மொழியினை போற்றும் விதமாக பல நிகழ்ச்சிகளும் தமிழக அரசு சார்பாக நடத்தப்படுகிறது.
Whatsapp பயனர்களுக்கான புதிய அப்டேட் – DPயில் வரவிருக்கும் புதிய வழிமுறைகள்!
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, மற்றும் கல்லூரிகளில் தமிழ் மொழிக்கு என்று தனி முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மேலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு என்று தனி சலுகைகள் வழங்கப்படுகிறது. தற்போது தமிழக அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு தனி மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. தமிழ் மொழியை அண்டை நாடுகளில் உள்ளவர்களும் ஆர்வமுடன் கற்க விரும்புகின்றனர்.
Exams Daily Mobile App Download
இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ்மொழியை வளர்க்க தமிழக அரசு பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. தமிழ் மொழியை போற்றும் வகையில் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள் போன்றவற்றை நடத்தி தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில் தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்தும் வகையில் திறனறித் தேர்வு திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. மேலும் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.1500 வழங்கப்படும் என்றும் இதற்காக ரூ.247 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.