ஜனவரி 6 & 7 ம் தேதி அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

0
ஜனவரி 6 & 7 ம் தேதி அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை - மாநில அரசு அறிவிப்பு!
ஜனவரி 6 & 7 ம் தேதி அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை - மாநில அரசு அறிவிப்பு!
ஜனவரி 6 & 7 ம் தேதி அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

அசாம் மாநில அரசு ஊழியர்களுக்கு மன அழுத்தம் குறைவதற்கு மற்றும் புத்துணர்ச்சி பெறுவதற்கும் ஜனவரி 6 மற்றும் 7ம் தேதி சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

சிறப்பு விடுமுறை:

இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது ஓமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் காரணமாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிவேகமாக பரவி வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 வருட கொரோனா காலகட்டத்திலும அரசு ஊழியர்கள் கொரோனா அச்சமின்றி பொதுமக்களுக்காக பணிபுரிந்தனர். அந்த வகையில் அசாம் மாநில அரசு ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடையும் அளவுக்கு முக்கிய செய்தி ஒன்றை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

மாநில அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு – மகிழ்ச்சியான அறிவிப்பு!

அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், அசாம் மாநில அரசு அதிகாரிகள் ஜனவரி 6 மற்றும் 7ம் தேதி தங்கள் குடும்பத்துடன் பொழுதை கழிக்க சிறப்பு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பதால் மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்கவும் மற்றும் அவர்கள் தங்கள் குடும்பத்துடன் தனது நேரத்தை செலவு செய்வதற்கும் இரண்டு நாட்கள் சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அசாம் மாநில அரசு ஊழியர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் 14 வயது பள்ளி மாணவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி – பொதுமக்கள் அச்சம்!

இந்த சிறப்பு விடுமுறை ஏ பிரிவு அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர் வரை பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விடுமுறை எடுப்பதன் மூலம் அரசு ஊழியர்கள் தங்கள் பிரச்சனைகள் அனைத்தையும் மறந்து தங்கள் குடும்பத்துடன் பொழுதை போக்கலாம். இந்த வகையில் பெற்றோர்கள் மற்றும் குடும்பம் இல்லாதவர்களும் இந்த சிறப்பு விடுமுறை எடுத்துக் கொண்டு புத்துணர்ச்சி அடையலாம். இந்த சிறப்பு விடுமுறை குறித்த முடிவு கடந்த செப்டம்பர் மாதம் அசாம் அரசு எடுத்த நிலையில் ஜனவரி மாதம் இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை குறித்து தமிழகம் உட்பட அனைத்து மாநில அரசு ஊழியர்கள் சார்பில் இதே போன்ற சிறப்பு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!