தமிழகத்தில் 14 வயது பள்ளி மாணவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி – பொதுமக்கள் அச்சம்!

0
தமிழகத்தில் 14 வயது பள்ளி மாணவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி - பொதுமக்கள் அச்சம்!
தமிழகத்தில் 14 வயது பள்ளி மாணவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி - பொதுமக்கள் அச்சம்!
தமிழகத்தில் 14 வயது பள்ளி மாணவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி – பொதுமக்கள் அச்சம்!

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 14 வயதுள்ள மாணவர் ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது.

ஓமிக்ரான் தொற்று:

தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து மக்கள் மீண்டு வர முடியாமல் தவித்து வரும் நிலையில் கொரோனா வைரசில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் பரவி வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு பணிகள் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. அதன்படி மாவட்ட ஆட்சியர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல்க்கு கொரோனா தொற்று உறுதி – ரசிகர்கள் அதிர்ச்சி!

ஆரம்பத்தில் தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30,000க்கும் மேல் இருந்தது. இந்த தடுப்பூசிகள் பயன்பட்டாலேயே தொற்றை கட்டுப்படுத்த முடிந்தது. அதனால் அரசு தடுப்பூசிகளை செலுத்த தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தற்போது பரவி வரும் ஓமிக்ரான் மூன்றாம் அலை கொரோனாவின் தாக்கம் இந்த மூன்றாம் அலை குழந்தைகளை குறி வைக்கும் என்று ஏற்கனவே மறுத்து வல்லுநர்கள் கூறியிருந்தனர். அதனால் தொற்றில் இருந்து குழந்தைகளை காக்கும் நடவடிக்கையாக பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு தமிழகத்தில் 9 – 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் ஜன.6 முதல் அமலுக்கு வரும் மினி லாக்டவுன்? அரசுக்கு கோரிக்கை!

15 முதல் 18வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை செலுத்தும் பணி தமிழகத்தில் தொடங்கியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 14 வயதுள்ள பள்ளி மாணவர் ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது. மேலும் அரக்கோண தமிழக காவல்துறை, நேவல் மற்றும் துணை ராணுவத்தை சேர்ந்த 45 பேருக்கும் ஒமைக்ரான் அறிகுறி இருப்பதாக தகவல் வந்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!