மாநில அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு – மகிழ்ச்சியான அறிவிப்பு!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - மகிழ்ச்சியான அறிவிப்பு!
மாநில அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - மகிழ்ச்சியான அறிவிப்பு!
மாநில அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு – மகிழ்ச்சியான அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்களைத் தொடர்ந்து ஒடிசா மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஜூலை 1, 2021 முதல் 31% DA உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் மாநில அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அகவிலைப்படி உயர்வு:

மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு கடந்த ஜூலை 1, 2021 தவணைக்கான அகவிலைப்படி உயர்வினை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக 28% ஆக இருந்த அகவிலைப்படி உயர்வானது கூடுதலாக 3% உயர்வினால் 31% ஆக உள்ளது. இந்த DA உயர்வானது நவம்பர் மாத சம்பளத்துடன் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக மூன்று தவணைகளுக்கான DA உயர்வு நிலுவையில் இருந்த நிலையில், அவற்றிற்கான உயர்வு அறிவிக்கப்பட்டது. ஆனால் அவை அளிக்கப்படவில்லை. இதற்கான கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வருவதால் விரைவில் நிலுவைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் துறையில் 10, 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – ரூ.81000 சம்பளம்!

மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து பல மாநில அரசுகளும் DA உயர்வை அறிவித்தது. அந்த வரிசையில் ஒடிசா அரசு தற்போது ஜூலை 1, 2021 க்கான DA உயர்வை அளிக்க உள்ளது. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் சுமார் 7.5 லட்சம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இருந்த 28% DA உடன் தற்போது அதிகரித்துள்ள 3% உயர்வையும் சேர்த்து மொத்தம் 31% DA உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஊழியர்களுக்கான 30% நிலுவைத் தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல்க்கு கொரோனா தொற்று உறுதி – ரசிகர்கள் அதிர்ச்சி!

ஜனவரி 2016 மற்றும் ஆகஸ்ட் 2017 க்கு இடையில் உயர்த்தப்பட்ட ஊதியத்தில் 50 சதவீத நிலுவைத் தொகையை அரசு வழங்க உள்ளது. மேலும் 31% DA உயர்வானது ஜூலை 2021 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் தற்போதைய தவணைக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த ஆலோசனை நடத்தப்பட்டு வரும் அதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜனவரி 1,2022 முதலான அகவிலைப்படி உயர்வு 3% அளிக்கப்பட்டால் மொத்த அகவிலைப்படி உயர்வானது 34% ஆக அதிகரிக்கும் என்பதால் மாநில அரசு ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!