மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் – 4 நாட்களுக்கு ‘ஆரஞ்சு’ அலெர்ட் எச்சரிக்கை!
தென்மேற்குப் பருவ மழையால், வருகிற 4 ந்தேதி வரை மாநிலம் முழுவதும் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பலத்த மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளதால் மாநில பேரிடர் மேலாண்மை துறையினர் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மழைக்கு வாய்ப்பு:
ஆண்டுதோறும் தென்மேற்குப் பருவ மழையால் ஜூன் முதல் செப்டம்பர் வரை பரவலாக மழை பெய்யும். இதனால் நாட்டுக்கு அதிகமான மழைப் பொழிவை கொடுக்கும் மழையாக இந்தப் பருவ மழை கருதப்படுகிறது. அதாவது தென்மேற்குப் பருவமழை வாயிலாகத்தான் நாட்டிற்கு தேவைப்படும் 75% வருடாந்திர மழை ஜூன் முதல் செப்டம்பர் வரை கிடைக்கிறது. இந்த வகையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரம் தொடங்கும். இந்த ஆண்டு கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. முதல் இரண்டு வாரங்களுக்கு சாதாரணமாக பெய்த மழை அதன்பின்பு தீவிரம் அடைந்தது.
Exams Daily Mobile App Download
பின்னர் மீண்டும் லேசாக பெய்து வந்த மழை இப்போது மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 2 வாரங்களாக கேரளாவின் மலையோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுதத்தன் பேரில், மாநிலத்தின் காசர்கோடு, இடுக்கி, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
பல மாவட்ட பள்ளிகளுக்கு கனமழை காரணமாக விடுமுறை – அரசு அறிவிப்பு
மேலும் கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை குஜராத் வரையிலான பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. அத்துடன் கர்நாடகாவிலும் மழை தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் இன்று முதல் வியாழன் வரை நான்கு நாட்களுக்கு மாநிலத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்து ‘ஆரஞ்சு’ அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.அதாவது மின்னல் மற்றும் இடியுடன் கூடிய தொடர்ச்சியான கனமழை எதிர்பார்க்கப்படுவதால், சில பகுதிகளில் குறைந்த தீவிரம் கொண்ட திடீர் வெள்ளம் ஏற்படலாம், என IMD எச்சரித்து உள்ளது. மேலும் கேரளாவின் தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தகவல்கள் கூறுகின்றன.