பல மாவட்ட பள்ளிகளுக்கு கனமழை காரணமாக விடுமுறை – அரசு அறிவிப்பு!
வங்கக்கடலில் உருவாகி உள்ள சூறாவளி காரணமாக பல மாநிலங்களில் அதிகனமழை பெய்து வருகிறது. இதனால், சில மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி விடுமுறை:
தென்-மத்திய வங்கக்கடலில் உருவாகி உள்ள சூறாவளி சுழற்சி காரணமாக நாட்டின் தென் மாநிலங்களில் அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது. அதாவது, கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கடந்த இரண்டு நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கேரளா மாநிலத்தில் வரும் புதன்கிழமை வரைக்கும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. மேலும், கூடுதல் கனமழையால் நிலச்சரிவு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், கேரளா கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரைக்கும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு 10 லட்சம் வரை உதவித்தொகை அறிவிப்பு – மத்திய அரசின் போட்டி
அதே போல நாளை கேரளா மாநிலத்தின் 8 மாவட்டங்களிலும், ஆகஸ்ட் 3 ஆம் தேதி 12 மாவட்டங்களுக்கும் மற்றும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி 12 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கனமழையின் காரணமாக கேரள மாநிலத்தின் சில பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பத்தனம்திட்டா மற்றும் கொல்லம் ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேரளாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் துறைகளையும் தயார் நிலையில் வைக்கும்படி மாவட்ட கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.