ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு!

0
ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் - தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு!
ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் - தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு!
ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு!

கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக, இரு ஆண்டுகளுக்கு முன்பு ரயில் சேவை முழுவதும் நிறுத்தப்பட்டது. தொற்றுப் பரவல் குறைந்து வரும் நிலையில் படிப்படியாக ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நெல்லையில் இருந்து ராஜபாளையம், மதுரை வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் அறிவிப்பு:

நாடு முழுவதும் கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், நாடு மெல்ல கொரோனாவுக்கு முந்தைய நிலையை நோக்கிச் சென்று வருகிறது. கொரோனா காலத்தில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் உள்ளிட்ட பொது பெட்டிகள் ரயில்களில் இணைக்கப்படாமலேயே இருந்தது. இதனால் சிறிய தூரம் பயணம் செய்வோரும் வேறு வழியின்றி முன்பதிவு செய்து பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். கொரோனா பாதிப்பு குறைந்ததைத் தொடர்ந்து சிறப்பு ரயில்கள் தொடங்கப்பட்டன. கொரோனா முழுவதுமாக கட்டுக்குள் வரும் நிலையில், வழக்கமான ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்நிலையில் நெல்லையில் இருந்து ராஜபாளையம், மதுரை வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) 2.75% உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் என அனைத்து எக்ஸ்பிரஸ்களிலும் முன்பதிவுகள் நிரம்பி வழிகின்றன. இதனால் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தாம்பரம் – நாகர்கோவில் இடையே ஒரு சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே முன்னதாக அறிவித்தது. இந்நிலையில் கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்களை இயக்கிட பயணிகள் சார்பில் தெற்கு ரயில்வேக்கு மனுக்கள் அளிக்கப்பட்டன. அதன்பேரில் தெற்கு ரயில்வே இரண்டு சிறப்பு ரயில்களை குறித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இந்த அறிவிப்பு அடிப்படையில் வரும் ஏப்ரல் 24ம் தேதி முதல் ஜூன் 26ம் தேதி வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கும், வரும் ஏப்ரல் 22 முதல் ஜூன் 24ம் தேதி வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.அந்த வகையில் நாகர்கோவிலில் மாலை 4.15க்கு புறப்படும் ரயிலானது, மறுநாள் காலை 4.10க்கு தாம்பரத்தை சென்றடையும். தாம்பரத்தில் இரவு 7.30 மணிக்கு புறப்படும் ரயிலானது, மறுநாள் காலை 7 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். நெல்லையில் இருந்து அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக வரும் ஏப்ரல் 17ம் தேதி முதல் ஜூன் 26ம் தேதி வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

மறுமார்க்கமாக வரும் 18ம் தேதி முதல் ஜூன் 27ம் தேதி வரை ஒவ்வொரு திங்கள் கிழமைகளிலும் தாம்பரத்தில் இருந்து தென்காசி பாவூர்சத்திரம் வழியாக நெல்லைக்கு சிறப்பு ரயில் இயங்க உள்ளது. இதையடுத்து நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். தாம்பரத்தில் இரவு 10.20 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 10.35 மணிக்கு நெல்லை சென்றடையும். இதற்கான முன்பதிவு விரைவில் தொடங்கும். அம்பை பாவூர்சத்திரம் வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறுகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!