10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான ரயில்வே வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு…!
தென் மத்திய ரயில்வே ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள மருத்துவமனை உதவியாளர் பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Hospital Assistant எனப்படும் மருத்துவமனை உதவியாளர் பதவிக்கு என மொத்தம் 20 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- தெற்கு மத்திய ரயில்வே அறிவிப்பின் படி, விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/நிறுவனத்தில் 10வது தேர்ச்சி அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
- விண்ணப்பதார்கள் வயதானது 19 முதல் 33க்குள் இருக்க வேண்டும் வயது வரம்பு மற்றும் தளர்வுக்கான விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.
TN Job “FB Group” Join Now
- தேர்வு செய்யபடும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.18,000/- ஊதியம் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 14.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.