ரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்பு – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
தென் மத்திய ரயில்வே சமீபத்தில் மருத்துவமனை உதவியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே தகுதியானவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | தென் மத்திய ரயில்வே |
பணியின் பெயர் | மருத்துவமனை உதவியாளர் |
பணியிடங்கள் | 20 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 14.06.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
ரயில்வே துறை காலிப்பணியிடங்கள்:
Hospital Assistant எனப்படும் மருத்துவமனை உதவியாளர் பதவிக்கு என மொத்தம் 20 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Exams Daily Mobile App Download
கல்வி தகுதி:
தெற்கு மத்திய ரயில்வே அறிவிப்பின் படி, விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/நிறுவனத்தில் 10வது தேர்ச்சி அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதார்கள் வயதானது 19 முதல் 33க்குள் இருக்க வேண்டும் வயது வரம்பு மற்றும் தளர்வுக்கான விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.
சம்பள விவரம்:
மருத்துவமனை உதவியாளர் – ரூ.18,000/-
தெற்கு மத்திய ரயில்வே ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்புக்கு எப்படி விண்ணப்பிப்பது?
- விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தை திறக்கலாம்.
- பின்னர் career/recruitment பக்கத்தைக் கண்டறியவும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கத்தை கிளிக் செய்து கவனமாகப் படிக்கவும்.
- அனைத்து விவரங்களையும் பிழையின்றி நிரப்பவும்.
- இறுதியாக, உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center