தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் – பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.. தொலைபேசி எண் அறிமுகம்!

0
தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் - பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.. தொலைபேசி எண் அறிமுகம்!
தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் - பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.. தொலைபேசி எண் அறிமுகம்!
தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் – பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.. தொலைபேசி எண் அறிமுகம்!

தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக அரசிடம் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் புகார் தெரிவிக்க ஏதுவாக தொலைபேசி எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரேஷன் அரிசி:

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக மக்கள் மாதந்தோறும் அருகில் உள்ள ரேஷன் கடைகள் வாயிலாக ரேஷன் அட்டைதாரர்கள் வீட்டு உபயோகப் பொருட்களை பெற்று பயன் அடைந்து வருகின்றனர். சமீப காலமாக மத்திய மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கடையில் வாயிலாகவே மக்களை வந்தடைகிறது.

மார்ச் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் – அறிவிப்பை வெளியிட்ட RBI! இது தெரியாம இருக்காதீங்க!

இந்த நிலையில் ரேஷன் அரிசியை பிற இடங்களுக்கு கடத்தல் மற்றும் பதுகுத்தல் போன்ற நிகழ்வு தொடர்ந்து அரங்கேறி வருகிறது. ரேஷன் அட்டைதாரர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள அரிசியை முறையாக விநியோகம் செய்யாமல் அதனை ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் வாயிலாக கடத்தப்படுகிறது. இதை தடுக்கும் நோக்கில் மாநில எல்லைகளில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

இதுவரை ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரையில் மக்கள் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக அரசிடம் புகார் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் 1800 599 5990 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!