புதிய கலால் கொள்கை – அமைச்சரவை ஒப்புதல்.. மதுக்கடைகள் மூடல்!
மத்திய பிரதேச மாநில அரசு புதிய கலால் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து மது அருந்துவதை தடுக்கும் முயற்சியாக அஹதாஸ் மற்றும் மதுபான பார்கள் மூடப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு அருகில் மதுக்கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கலால் கொள்கை:
மத்திய பிரதேச மாநிலத்தில் மது கடைகளை மூட கோரி பல்வேறு தரப்பினரும் அரசை வலியுறுத்தி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மது கடைகளை மூடும் வகையிலான புதிய கலால் கொள்கை உருவாக்கப்பட்டது. இக்கொள்கைக்கு தற்போது அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை விரைவில் – ஹாப்பி நியூஸ்!
இதனையடுத்து அம்மாநிலத்தில் அஹதாஸ் மற்றும் மது பார்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இனி மது அருந்த மாநிலத்தில் தனியாக இடவசதி கிடையாது. மேலும் மது கடைகளில் மட்டுமே மது விற்பனை நடைபெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய அம்மாநில முதல்வர் மக்கள் மது அருந்துவதை தடுக்கும் நோக்கில் இருந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
கடந்த 2010 ம் ஆண்டிலிருந்து மாநிலத்தில் புதிதாக மதுக் கடைகள் திறக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் இதுவரை 64 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியிட்டுள்ளார். தற்போதைய காலால் கொள்கையின்படி கல்வி நிறுவனங்கள், விடுதிகள், வழிபாட்டுத் தலங்கள் 100 மீ தூரத்தில் மதுக்கடைகள் அமைக்கப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download