மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ் – அகவிலைப்படி வருவதில் சிக்கல்!
நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டதில் இருந்து அதற்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் டிஏ மற்றும் டிஆர் நிலுவைத் தொகை வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் அதிக விரக்தியில் உள்ளனர்.
ஷாக் நியூஸ்:
கொரோனா வருகையால் 2020ம் ஆண்டு இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக மத்திய அரசின் வருவாயில் அதிக சரிவு ஏற்பட்டதையடுத்து 01-01-2020 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்தது. மேலும் அகவிலைப்படி உயர்வை வழங்குவது குறித்து 01.07.2021க்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்றும், அவ்வாறு முடிவு எடுக்கும்போது 01.01.2020 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு அதன் பணப்பயன் 01.07.2021 முதல் அளிக்கப்படும் என்றும் அறிவித்தது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
அதன்படி, மத்திய அரசு தனது அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை மறுபரிசீலனை செய்து 01.01.2020 முதல் 21 விழுக்காடு, 01.07.2020 முதல் 25 விழுக்காடு, 01.01.2021 முதல் 28 விழுக்காடு, 01.07.2021 முதல் 31 விழுக்காடு என உயர்த்தி, அதன் பணப்பயனை 01-07-2021 முதல் வழங்கியது. இதனை தொடர்ந்து 01.01.2022 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை 34 விழுக்காடாக மத்திய அரசு உயர்த்தி வழங்கியுள்ளது. இதனால் ஏராளமான ஊழியர்கள் பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து 18 மாத நிலுவைத் தொகையை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று ஊழியர்கள் காத்திருந்தனர். இருப்பினும் அகவிலைப்படி உயர்வுக்கான நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை. அதை வழங்குவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக முன்னதாக சில தகவல்கள் வெளியானது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், அகவிலைப்படி நிவாரணத்தை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிதி அமைச்சகம் நிராகரித்து விட்டதாக தற்போது ம தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மொத்த DR மற்றும் DA நிலுவைத் தொகை ரூ.34,000 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஓய்வூதிய விதிகளை மறு ஆய்வு செய்வதற்கான தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிலைக்குழுவின் 32வது கூட்டத்தில் ஓய்வூதியத் துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறியது, ஓய்வூதியதாரர்களின் நலனைக் கவனித்து வருவதாகவும் அவர்களின் குறைகளை பல நிலைகளில் தீர்த்து வருவதாகவும் கூறியுள்ளார். அதேநேரம் அகவிலைப்படி நிலுவைத்தொகை வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.