LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு ஷாக் தகவல் – இனி மானியம் கிடையாது!

0
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு ஷாக் தகவல் - இனி மானியம் கிடையாது!
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு ஷாக் தகவல் - இனி மானியம் கிடையாது!
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு ஷாக் தகவல் – இனி மானியம் கிடையாது!

நாடு முழுவதும் 2020ம் ஆண்டு மே மாதம் வரை சமையல் எரிவாயுவுக்கு மானியம் வழங்கப்பட்டு வந்தது. இருப்பினும் கடந்த 2018ம் ஆண்டில் அதிகபட்சமாக ஒரு சிலிண்டருக்கு ரூ.435 மானியம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை குறைந்ததால் மானியமும் படிப்படியாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் சமையல் எரிவாயுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இனி மானியம் கிடையாது:

வீட்டு உபயோகம் மற்றும் வணிக சமையல் எரிவாயு சிலிண்டா் விலையனாது சா்வதேச சந்தையில் எரிசக்தி விலை உயா்வு அடிப்படையில் ஒரே மாதத்தில் 2வது முறையாக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.1,015.50க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 3 அதிகரித்துள்ளது. மேலும் ரூ. 2,499க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ. 8 உயர்த்தப்பட்டு ரூ.2,507க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையே, பல நகரங்களில் சமையல் எரிவாயுக்கான மானியத்தை மத்திய அரசு முறையாக வழங்குவதில்லை என்ற புகாா் எழுந்து உள்ளது.

Exams Daily Mobile App Download

அதன் காரணமாக ஏழைப் பெண்கள் உள்பட அனைத்து நுகா்வோரும் மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், சமையல் எரிவாயுவுக்கான மானியம் நிறுத்தப்பட்டது, நிறுத்தப்பட்டது தான், அதை மீண்டும் வழங்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்த கருத்துகள் பேரதிர்ச்சி அளிக்கின்றன. மேலும் சமையல் எரிவாயு விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரும் இந்த நிலையில், அதை சமாளிக்க மீண்டும் மானியம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்ப்படா விட்டால் அது ஏழை, நடுத்தர மக்களை பெருந்துயரத்தில் தள்ளிவிடும் என்றார்.

இதை அடுத்து பெட்ரோல், டீசல் விலைகள் வரலாறு காணாத அளவிற்கு கடந்த வாரம் உயர்ந்தது . மேலும் அதற்கு அதிகமான எதிர்ப்பு வந்த நிலையில் அவற்றின் மீதான கலால் வரி குறைக்கப்பட்டது. அதே போல், சமையல் எரிவாயுவுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை மீண்டும் வழங்க வேண்டும், அது மட்டுமல்லாமல் அதன் விலையும் குறைக்கப்பட வேண்டும், இதுவே மக்களின் எதிர்பார்ப்பு என குறிப்பிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து கொண்டே போகிறது, இந்த விலை உயர்வை ஓரளவுக்கு மட்டும் தான் மக்களால் எதிர்கொள்ள முடியும். எனவே விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை என தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!