TNPSC Group 2 தேர்வுக்கான முக்கிய அப்டேட் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் இன்று நடைபெற்ற குரூப் 2 தேர்வானது திட்டமிடப்பட்ட படி சிறப்பாக தமிழகம் முழுவதும் நடந்து முடிந்துள்ள நிலையில், கோவையில் இருந்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
குரூப் 2 தேர்வு:
தமிழக அரசின் குரூப் 2 நிலை பதவிகளுக்கான தேர்விற்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, விண்ணப்ப பதிவுகள் மற்றும் மற்ற செயல்முறைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு மே 21ம் தேதியான இன்று தமிழகம் முழுவதும் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்விற்கான தகுதியாக டிகிரி நிர்ணயிக்கப்பட்டிருந்ததால் பட்டதாரி இளைஞர்கள் அதிக அளவிலானவர்கள் தேர்விற்கு விண்ணப்பித்துள்ளனர். குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்விற்கு தமிழகம் முழுவதும் மொத்தம் 11,78,000 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
Exams Daily Mobile App Download
தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களிலும் தேர்விற்கான 4,012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை தேர்வுக்கான நேரம் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், தேர்வர்கள் காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என்றும் அதற்க்கு பிறகு வரும் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தேர்வாணையம் தெரிவித்திருந்தது. கூடுதலாக தேர்வு முடிந்த பிறகு 12:45 மணிக்கு தான் தேர்வு கூடத்தை விட்டு தேர்வர்கள் வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
TNPSC குரூப் 2 விடைக்குறிப்பு & மதிப்பெண்கள் 2022 – தேர்வு எழுதியோர் கவனத்திற்கு..!
கோவை மாவட்டத்தில் மட்டும் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு எழுத மொத்தம் 48,039 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்காக 150 தேர்வு மையங்கள் கோவை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், தேர்வர்களை கண்காணிக்க 300 தேர்வு மைய ஆய்வு அலுவலர்கள், துணை ஆட்சியர்கள், 10 பறக்கும் படை அலுவலர்கள், 60 மொபைல் அலுவலர்கள் போன்றவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி சில நாட்களில் விடைத்தாள்கள் மதிப்பிடுதல் தொடங்கப்பட்டு தேர்வின் முடிவுகள் ஜூன் மாத இறுதியில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.