தமிழக பேருந்து பயணிகளுக்கு ஷாக் நியூஸ் – இனி இதற்கெல்லாம் தடையா?

0
தமிழக பேருந்து பயணிகளுக்கு ஷாக் நியூஸ் - இனி இதற்கெல்லாம் தடையா?
தமிழக பேருந்து பயணிகளுக்கு ஷாக் நியூஸ் - இனி இதற்கெல்லாம் தடையா?
தமிழக பேருந்து பயணிகளுக்கு ஷாக் நியூஸ் – இனி இதற்கெல்லாம் தடையா?

சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக சத்தமாக பேசுவது மற்றும் மொபைல் போனில் பாட்டு கேட்பது குறித்த புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சென்னை மாநகர போக்குவரத்து பேருந்துகளில் சப்தமாக போன் பேசத் தடை விதிக்க தமிழக அரசுக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் பரிந்துரை செய்துள்ளது

ஷாக் நியூஸ்:

பேருந்துகளில் பயணம் செய்யும் போது, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரிடமும் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்த செயல் பிற பயணிகளுக்கு எரிச்சலூட்டும் வகையில் அமைவதால் பயணிகள் நடத்துனரிடர் புகார் செய்கின்றனர். இந்த புகாரை கருத்தில் கொண்டு நடத்துனர் பிரச்சினைக்குரிய நபரிடம் செல்போன் பயன்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் முன்வைத்தாலும், சில பயணிகள் தகராறு செய்து பிரச்சினையை பெரிதுபடுத்தி விடுகிறார்கள். இதை கட்டுபடுத்த உரிய அதிகாரம் இல்லாததால் நடந்துனர் ஓர் எல்லைக்கு மேல் எதுவும் செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில், பேருந்துகளில் சத்தமாக போன் பேசுவது, பாடல் கேட்பது, கேம் விளையாடுவது போன்றவை சக பயணிகளுக்கு இடையூறாக இருப்பதால், இவற்றுக்கு தடை விதிக்கக் கோரி திருப்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பொன்னுசாமி மனு அளித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, பேருந்துகளில் சத்தமாக போன் பேசுவது, பாடல் கேட்பது, வீடியோ கேம் விளையாடுவது உள்ளிட்டவைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இதேபோன்ற நடைமுறை கர்நாடக மாநிலத்தில் நடைமுறையில் இருப்பதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜூன் 15 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு முக்கிய அறிவிப்பு!

இந்தியாவை பொறுத்தவரை பொதுவாக ரயில் பயணம் என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகவே உள்ளது. ஏனெனில்,குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் பயணம் செய்யும் போது பாட்டு பாடுவது, சத்தமாக பேசி மகிழ்வது , அரட்டை அடிப்பது என அனைத்திற்கும் ஏதுவாக இருக்கும். எனினும்,அதே சமயம் சிலர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொள்வார்கள். இதனால் ரயில்களில் பயணம் செய்யும் போது சத்தமாக பேசினாலோ அல்லது மொபைல் போனில் சத்தமாக பாட்டு கேட்டாலோ அபராதம் வசூலிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் முன்னதாக அறிவித்துள்ளது. தேவைப்பட்டால் இயர்போனில் மட்டும் பாட்டு கேட்டுக் கொள்ளலாம். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!