ஜூன் 15 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு முக்கிய அறிவிப்பு!
தற்போது மீண்டும் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தினால் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜூன் 15 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகமாக இருந்து வருகிறது. இந்த கொரோனா பரவலின் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுமே பொதுத்தேர்வு எதுவும் நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் ஓரளவுக்கு கொரோனா பரவல் குறைந்த காரணத்தினால் பழையபடி பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டன.
Exams Daily Mobile App Download
இரண்டு ஆண்டுகளுமே பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்ட காரணத்தினால் மாணவர்களின் கல்வித்திறன் மிகவும் பதிப்படைந்துள்ளது. மாணவர்களின் கல்வித்திறனை மீட்டெடுக்க சில மாநிலங்களில் கோடை விடுமுறை குறைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதனால் மாணவர்களுக்கு கல்வித்திறனை குறைக்க சில மாநிலங்களில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் துவங்க இருக்கிறது.
தற்போது கொரோனா பரவல் அதிகரித்துவரும் காரணத்தினால் பள்ளிகள் திறப்பதில் மாற்றங்கள் இருக்குமோ என ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் அறிவிப்பிற்காக காத்து கொண்டிருந்தனர். ஆனால், வழக்கம் போல பள்ளிகள் துவங்கப்படும் எனவும், பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்திலும் ஜூன் 15 ஆம் தேதி முதல் பள்ளிகள் துவங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.