TNPSC தேர்வர்களுக்கு ஷாக் அறிவிப்பு – ஆங்கிலத்தில் மட்டும் தேர்வு? தமிழில் நடத்த கோரிக்கை!

0
TNPSC தேர்வர்களுக்கு ஷாக் அறிவிப்பு - ஆங்கிலத்தில் மட்டும் தேர்வு? தமிழில் நடத்த கோரிக்கை!
TNPSC தேர்வர்களுக்கு ஷாக் அறிவிப்பு - ஆங்கிலத்தில் மட்டும் தேர்வு? தமிழில் நடத்த கோரிக்கை!
TNPSC தேர்வர்களுக்கு ஷாக் அறிவிப்பு – ஆங்கிலத்தில் மட்டும் தேர்வு? தமிழில் நடத்த கோரிக்கை!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து இத்தேர்வுக்கான முதல் தாள் ஆங்கிலத்தில் மட்டும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் இத்தேர்வு நடைபெறுவதால் இதனை தமிழில் நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

தேர்வு முறை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அரசின் பல்வேறு துறைகளில் நியமிக்கப்படுகிறார்கள். இதில் தற்போது ஒன்றன்பின் ஒன்றாக அறிவிப்புகள் வெளியாகின்றன. அதன்படி தமிழக அரசின் சமூகப் பாதுகாப்புத் துறையில் உள்ள குழந்தை பாதுகாப்பு பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தேர்வு ஜூன் 19ஆம் தேதி அன்று நடைபெறும் என்று TNPSC தேர்வாணையம் அறிவித்துள்ளது.

TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – இன்னும் 10 நாட்கள் மட்டுமே!

குழந்தை பாதுகாப்பு அதிகாரி தேர்வுக்கு சமூகவியல், சமூகப்பணி, உளவியல், குழந்தை பாதுகாப்பு, குற்ற ஆய்வியல் உள்ளிட்ட பாடங்களில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இத்தேர்வு இரண்டு தாள்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் தாள் ஆங்கிலத்தில் மட்டும் தான் நடத்தப்படும் என்று TNPSC தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பிற மாநிலத்தவர்கள் அரசு பணியில் சேர்வதை தடுக்க அனைத்து போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இத்தேர்வில் மட்டும் ஆங்கிலத்தில் நடத்தப்படுவது நியாயமற்றது.

TNPSC 7ம் வகுப்பு முடித்தவர்களுக்கான முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!

மேலும் இது தொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, தமிழகத்தில் TNPSC நடத்தும் அனைத்து போட்டித்தேர்வுகளிலும் தமிழ்மொழித்தகுதி தாள் கட்டாயமாக்கபப்பட்டுள்ளதால் இத்தேர்விலும் இரண்டாம் தாளில் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கான படிப்புகள் தமிழ்வழியிலும் பயிலலாம் என்பதால் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் கூறினார். அத்துடன் இது குறித்து ஆலோசனை மேற்கொண்டு இத்தேர்வில் திருத்தப்பட்ட அறிவிக்கையை விரைவில் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!